Thursday, September 29, 2011

சீனு டைம்ஸ்-10

கொஞ்ச நாள் முன்னாடி ஊருக்கு ஒரு சிறிய விடுப்புக்கு போய்
இருந்தப்ப, நண்பரின் தந்தை நோய்வாய்ப்பட்டு வேலூரில் உள்ள பிரசித்தம் பெற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என கேள்விப்பட்டு அவரைப்பார்க்க சென்றிருந்தேன். அவர் ஏற்கனவே ஆஸ்த்மா தொல்லையால் அவதிப்பட்டு கொண்டிருந்தார், சமீபத்தில் அவரது உடலில் ஆக்ஸிஜன் குறைந்து, நுரையீரல் முழுக்க கார்பன்
டைஆக்ஸ்சைடு  வியாபித்து, ஒரு கட்டத்தில் மயக்கமுற்று
அவசரப்பிரவில் அனுமதிக்கப்பட்டு பின் கொஞ்சம் கொஞ்சமாக
தேறி விட்டார். நான் அவரைப்பார்க்க போன போது நண்பன் அங்கு
இல்லை, கடைக்கு சென்றிருந்தார் என அறிந்தேன். அவர்
தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரைச்சுற்றி  ஏகப்பட்ட
மருத்துவ எந்திரங்கள் காணப்பட்டன. ஒரு பெண் வந்து ஒரு
எந்திரத்தை இயக்கி, அதன் மூலம் அவருக்கு மருந்து கொடுத்தார்,  முடிந்ததும் எந்திரத்தை அணைத்து விட்டு சென்று விட்டார்.

சிறுது நேரம் கழித்து அதே பெண், அவரிடம் வந்து பின் வருமாறு
பேசி விட்டு சென்றார். " பெரியவரே, நான் நாளை முதல் வேற பிரிவுக்கு வேலைக்கு போறேன், நீங்க இன்னும் ரெண்டு நாள்ள
வீட்டுக்கு போய்டுவீங்க...உடம்ப பத்திரமா பார்த்துக்கோங்க, 
வேளைக்கு மருந்து சாப்பிடுங்க, நான் போயிட்டு வரேன்."
எத்தனை பேருக்கு இந்த மனசு வரும், அந்தப்பெண் அவ்வளவு அக்கறையோடும், கரிசனத்தோடும்
விசாரித்து விட்டுச்சென்றது இன்னும் என் கண் முன்னே காட்சியாக
உள்ளது. மருந்தோடு அன்பும் கலக்கும் போது கண்டிப்பாக நோய் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எத்தனை பேர் இது மாதிரி இருப்பார்கள் எனத்தெரியாது, அனால் இது மாதிரி சில பேராவது இருப்பதால் தான் நாட்டில் சில நல்லதும் நடக்குது, மழையும் அப்பப்ப பெய்யுது.

அன்பின் பாதை சேர்ந்தவருக்கு 
முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, 
அதுவே வாழ்வின் நீளமடா !!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கொஞ்சம் நேரம் செலவு செய்து கீழே சுட்டியிடப்பட்ட காணோளியை 
பாருங்கள்.  மோகன் ராஜ் எனப்படும் முன்னாள் சிபிஐ ஆய்வாளர்
மிக அருமையாய், ராஜீவ் கொலை வழக்கின் போக்கை குறித்து
நிறைய வாதங்களை முன் வைக்கிறார், ஏற்கனவே ரகோத்தமன்
(இவரும் ராஜீவ் கொலை வழக்கில் பங்கேற்ற  சிபிஐ அதிகாரி) எழுதிய புத்தகத்தை படித்திருக்கிறேன். அதில் சொல்லப்படாத நிறைய விஷயங்களை மோகன் ராஜ் அவர்கள் சொல்லுகிறார். ஒன்று மட்டும் நன்றாக புலப்படுகிறது, கண்டிப்பாக நிறைய பெரிய தலைகள் ராஜீவ் கொலை வழக்கில் தப்பித்துள்ளனர். கொலை செய்த விடுதலைப்புலிகளை மாட்டிவிட்டு, கொலை செய்யச்சொன்ன, கொலை செய்யத்தூண்டியவர்கள் எல்லாம் தப்பித்து விட்டனர். ராஜீவ் கொலை வழக்கில், ஏனோ மர்மம் விலகவே இல்லை !!!!

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=7YYfXWxe_1A

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திண்ணை

நண்பகலில் ஒரு பிச்சைக்காரன் வந்து படுத்தான்.....
பின்பு ஒரு நாய் வந்து படுத்துறங்கியது ...
விவசாயி ஒருவன் வந்தமர்ந்தான்...
வீட்டின் மழலைகள் வந்தமர்ந்து விளையாடின...
வேலைக்காரி வந்து சுத்தம் செய்தாள்....
திருவிழா வசூலுக்கு வந்த ஊர்
பெரியவர்கள் சற்று இளைப்பாறினார்...

திண்ணையான என் மீது தான்
எத்தனை சுமைகள்...
ஒவ்வொரு சுமைகளுக்குள் தான்
எத்தனை கதைகள்....!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
வேலூரிலிரிந்து ஆற்காடு செல்ல, வேலூர் பேருந்து நிலையத்தில் 
ஒரு தனியார் பேருந்தில் ஏறினேன். ரெண்டு சீட்தான் காலியாக
இருந்தது, ஒன்னு முன்னாடி, இன்னொன்னு பின்னாடி. சரி
முன்னாடி போய் அமர்வோம்னு மூணு பேரு சீட்ல, ரெண்டு 
ஆளுங்க இருந்தாங்க, தள்ளி உட்காருங்குன்னு சொன்னேன். 
அதெல்லாம் முடியாது...மூணு ஆளுக்கு சேர்த்து டிக்கெட்
வாங்கியாச்சி, கிளம்புன்னு சொன்னார். நான் கோவமா நடத்துனர் பக்கம் திரும்பி நான் 55 டிக்கெட் எடுக்குறேன், ஒருத்தரும் சீட்ல 
ஒக்கார கூடாது, சரியான்னு கேட்டேன். நடத்துனர்  சிரிச்சிக்கிட்டே, 
சார் டீசெண்டா இருக்கீங்க, இங்க வாங்கனு வேற சீட் கொடுத்தார். 
நம்ம என்ன கேக்கிறோம், இவர் ஏன் வழியராருனு எனக்கு 
புரியல. 
அப்புறம் ஆற்காடு கிட்ட வந்ததும் இறங்க எத்தனிக்கையில் 
தான் கவனிச்சேன்,  அந்த மூணு சீட்ல உக்கார்ந்து இருந்த ரெண்டு
பேர் கையும் எக்ஸ் பொசிஷன்ல ஒருத்தர் வேட்டிகுள்ளயும், 
இன்னொருத்தர் பேண்டுக்குள்ளையும் மாறி மாறி  இருந்தது. டேய் நீங்க அவங்களாடன்னு தலையில் அடிச்சிக்கிட்டு,  என்ன
கண்றாவிடா இதுனு இறங்கிட்டேன். எப்பா, உங்கள யாரும் இங்க அவங்களா இருக்காதீங்கன்னு சொல்லலை.....ஆனால் 
பொது இடத்தில இதெல்லாம் நல்லாவா இருக்கு ???   

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நகைச்சுவை - 6 !!!







.

Wednesday, September 7, 2011

"மங்காத்தா" டா !!!


உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....
உள்ளே தல....வெளியே தல.....
வெளியே தல.....உள்ளே தல....

இது தலையோட மங்கத்தாடா....உள்ளேயும் தலதான்...வெளிய்லையும் தலதான்...வாலி, அமர்க்களம், தீனா காலத்தின் அஜித் ரொம்ப யுகங்களுக்கப்பறம் இப்பத்தான் "தல" காட்றார். பொதுவா ஹீரோன்னா, சரக்கடிக்க கூடாது, தம்மடிக்க கூடாது, நிறைய பொண்ணுகிட்ட போகக்கூடாது, திருடக்கூடாது, ஏமாத்தக்கூடாது,கெட்ட வார்த்தை பேசக்கூடாது,தொப்பைய காட்டக்கூடாது, வயச சொல்லக்கூடாது, மல்டி ஸ்டார் படத்தில நடிக்ககூடாது, டை அடிக்காம இருக்கக்கூடாது, சப்ப பசங்கக்கிட்ட அடி வாங்கக்கூடாது......இது மாதிரி ஏகப்பட்ட கூடாதுகள் உண்டு. அனால், மேல சொன்ன எல்லாத்தையும் அஜித் தில்லா தூக்கி போட்டுட்டு இந்த கதையில், இந்த படத்தில் நடிச்சதுக்கே ஒரு ஸ்பெஷல் வாழ்த்துகள்.
கிரிக்கெட்டில் நடக்கும் சூதாட்டமும் அதன் பிண்ணனியில் புரளும் கோடிக்கணக்கான பணமும் தான் கதைக்களம். விநாயக் மகாதேவன் என்ற போலீஸ் பாத்திரத்தில் அஜித் நடித்துள்ளார். ஒரு கெட்டவனுக்கு உதவப்போகும் தருணத்தில், ஆறு மாதம் வேலையிலிருந்து அஜித் இடைக்கால பணி நீக்கம் செய்யப்படுகிறார். பின்பு நாலு சப்ப பசங்கள பின் தொடர்ந்து, அவர்கள் போடும் 500 கோடி பணத்திருட்டு திட்டத்தில் சேர்ந்து கொள்கிறார். அர்ஜுன்(பிருதிவிராஜ்) தலைமையில் போலீஸ் அணி கிரிக்கெட் சூதாட்ட கும்பலையும், புரளும் பணத்தையும் எல்லா இடங்களிலும் பறிமுதல் செய்கின்றனர். அஜித் தலைமையில் உள்ள ஐவர் குழு எப்படி இந்த 500 கோடி பணத்தை போலீசுக்கும், சூதாட்ட கும்பலுக்கும் தெரியாமல் லவுட்டுகின்றனர், பின்னர் என்ன ஆகிறது என்பதை கண்டிப்பாக எதாவது ஒரு வெள்ளித்திரையிலோ, துணித்திரையிலோ, தங்கத்திரையிலோ காண்க.
படத்தின் முதல் பாதியின், பாதி வரை விதவிதமா நடிகர்கள் புதுசுபுதுசா வந்துகிட்டே இருக்காங்க......அவ்ளோ பெரிய கும்பல் இந்தப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அஜித், அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமி ராய், அண்ட்ரியா, வைபவ், பிரேம்ஜி, சுப்பு பஞ்சு, ஜெயப்பிரகாஷ், அர்விந்த் ஆகாஷ்....எம்மாடி...முடியல....போதும் இத்தோடு நிறுத்திக்கிறேன். இவ்வளவு பேர் கதைக்கு தேவைப்பட்டிருந்தாலும், அஜித்தின் ஆளுமைதான் படம் முழுக்க...சொல்ல போனால் அஜித்தின் மற்ற படங்களை விட இந்த படத்தில் அவருக்கு காட்சிகள் குறைவுதான். இரண்டாம் பாதியில் தூள் பரத்துகிறார்....அதுவும் அந்த தனியாக சதுரங்கம் ஆடும் இடம் செம. இது மாதிரி தொடர்ந்து நல்ல ஸ்கோப் உள்ள படங்களில் அஜித் நடிக்கக்கடவுக நாராயணா !!! அர்ஜுனுக்கு வயது முதிர்ச்சி ரொம்பவே தெரிகிறது. திரிஷா கொஞ்சம் நேரம் காதல் பண்றாங்க...பின் அழறாங்க...அப்புறம் காணமேலே போய்டுறாங்க. லட்சமி ராய் தான் செம டாப்பு. அரேபியன் குதிரைலாம் பிச்சை வாங்கணும். அஞ்சலி, ஆண்ட்ரியாலாம் கூட இருக்காங்க. பிரேம்ஜி காமெடி பண்றேன்னு சொற்ப இடங்கள் தவிர்த்து, நிறைய இடத்தில மொக்கை போடுறார்.சென்சார்க்காரங்க தொல்லை பெரும் தொல்லையா இருக்கு....எதையுமே காட்ட மாட்டேன்றாங்க, கொஞ்சம் சீன் தெரியும் காட்சிகளில் கூட ஏதோ ஜிகுஜிகுன்னு வந்துடுது......இந்த மாதிரி காட்றதுக்கு அந்தக்காட்சிய வெட்டியே தொலைக்கலாம். நம்ம எந்த காலத்தில் இருக்கிறோம்னு சில நேரத்தில் பிடிபடுவதில்லை.
படத்தின் இரண்டு மிகப்பெரிய தவறாக எனக்குத்தெரிவது திரைக்கதையும், பாட்டும்தான்.படத்தில் நிறைய இடங்கள் ஆங்காங்கே தொய்வாக செல்கிறது, இரண்டாம் பாதியிலும் கூட. யுவன் என்ன அவசரத்தில் இருந்தாரோ தெரியல, விளையாடு மங்காத்தா பாட்டு தவிர எதுவுமே சரி இல்லை. பின்னணி இசையும் சுமார்தான், அதுவும் முதலில் வரும் நகைச்சுவை காட்சிகளில், பின்னணி இசை ரொம்ப கேவலமா இருக்கு. இத்தனை சுமாரான ஆறு பாட்டு போட்டதுக்கு, இந்த மாதிரி கதைக்கு மூணு பாட்டு மட்டும் நச்சுன்னு போட்டிருக்கலாம். வெங்கட் பிரபு திரைக்கதைக்கு மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் பிரம்மாண்டமான வெற்றி பெற்றிருக்கும். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தான் படத்தின் பலம். வசனங்கள் ஓகே ரகம். வெங்கட் பிரபு அதி தீவிர அஜித் ரசிகர் போல, படத்தை பாருங்கள் புரியும். நிறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அஜித்திற்காக மற்றும் மேக்கிங்க்காக கண்டிப்பாய் ஒரு முறை பார்க்கலாம்.
.