Tuesday, July 26, 2011

நகைச்சுவை - 5 !!!








.

Monday, July 25, 2011

வாழ்க்கை இன்னொரு முறை கிடைப்பதில்லை !!! (Zindagi Na Milegi Dobara)

உங்க வாழ்க்கைல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா? வெளியூர் சுற்றுலா பயணம் நண்பர்களோடு போய் ரொம்ப நாள் ஆச்சா? வாழ்கையின் அர்த்தங்கள் சரியாக பிடிபடுவதில்லையா? உங்களுக்கு அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்ல விருப்பம் அதிகமா? அப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தை பக்கத்தில் ஓடுற திரை அரங்கில் போய் பார்த்துடுங்க. 
 படத்தின் துவக்கத்தில், கபீர்(அபய் தியோல்) தன் காதலை சொல்லி, கல்யாணம் செய்து கொள்ள நடஷாவிடம்(கல்கி) ப்ரபோஸ் செய்கிறார். பிறகு நடக்கும் அவர்களின் நிச்சயத்தில், தன் இரு நண்பர்களோடு 
ஸ்பெயின்  நாட்டுக்கு சென்று மூன்று வாரம் பேச்சிலர் பார்ட்டிதனை
வித்தியாசமாக ரோடு ட்ரிப்பில் செலவிட செல்வதாக சொல்கிறார். 
ஸ்பெயினில் கபீருடன் மற்ற இரு நண்பர்களான இம்ரான்(பர்ஹான் அக்தர்) 
மற்றும் அர்ஜுனும் (ஹ்ரித்திக் ரோஷன்) சேர்ந்து கொள்கின்றனர். 
ஸ்பெயினில் மூன்று நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்க்கேற்ப 
ஆளுக்கு ஒரு விளையாட்டை, வெவ்வேறு   இடங்களில் தேர்வு  செய்கின்றனர். ஒவ்வொரு இடமாக  நெடுஞ்சாலை வழியாக
செல்கின்றனர்.  எவ்வாறு அவர்களின் ஸ்பெயின் ட்ரிப் செல்கிறது, 
அந்த சுற்றுலாவின் ஊடே நடக்கும்  நிகழ்வுகள், சந்திக்கும்
மனிதர்கள், பின் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறுகிறது என்பதுதான் கதை.     
 ஹ்ரித்திக் ரொம்ப அழகாய் அடக்கி வாசித்து நடித்திருக்கிறார்.
இது மாதிரி மூன்று பேர் உள்ள கதையை தேர்வு செய்து 
நடித்ததற்க்கே ஒரு ஸ்பெஷல் சபாஷ். லைலாவாக வரும் 
காத்ரினாவிடம் காதலில் விழும் இடங்களும், தன் தொழிலா, காதலா, வாழ்க்கையா என குழம்பும்  இடங்களிலும் நல்லா நடித்திருக்கிறார்.
பர்ஹான் படம் முழுக்க நகைச்சுவை செய்கின்றார்...மனதில், தன் உண்மையான தந்தையை தேடும் சோகத்தை வைத்துக்கொண்டு அழகாய் நடித்து இருக்கிறார்...முக்கியமாய் தன் தந்தையை சந்திக்கும் நேரத்திலும், காத்ரினாவிடம் ஜொள்ளு விடும் போதும். படத்தில் உள்ள முக்கியமான ஒன் லைனர்ஸ் மற்றும் ஜாவேத் அக்தரின் கவிதைகள் 
எல்லாம் அற்புதமாய் பர்ஹானுக்கு படத்தில் அமைந்துள்ளது. அபய் தியோலும் எப்பவும் போல அளவா சிம்பிளா  நடித்திருக்கிறார். 
காத்ரினா செம அழகா இருக்கார்..கொஞ்சம் போல நல்லாவும் நடிச்சிருக்காங்க. கல்கி கொச்செளின், நஸ்ருதீன்ஷா எல்லாம் வந்து போறாங்க.   
 வெகு சில இடங்களில் தில் சாஹ்தா ஹய் படத்தின் தாக்கம் இருந்தாலும், படம் டெக்னிக்கலா மிரட்டி இருக்காங்க. முக்கியமா அந்த ஸ்கை டைவிங் 
காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பிரமிக்க வைக்கிறது. பாக்கிற நாமளும் 
பறக்கிற மாதிரி ஒரு உணர்வு. பின்னணி இசை உறுத்தாமல் படத்தோடு 
ஒன்றி வருகிறது. யாரோ வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் கார்லோஸ் 
கட்டாலனாம், ரொம்ப இயற்கையா எடுத்து இருக்கார். ஜோயா அக்தர் அற்புதமா எழுதி இயக்கி இருக்காங்க. முக்கியமாய் வசனங்கள் அற்புதம். இன்னும் படத்தில் சிலாகித்து சொல்ல நிறைய விஷயம் உள்ளது.... சொல்லி கேட்பதை விட பார்த்து அனுபவித்தல் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் N O S T A L G I C  என்ற வார்த்தை சொல்வார்கள் 
இல்லையா, இந்தப்படம் முடிகையில்  கண்டிப்பாய் அதை உணர முடியும்.
 மத்தபடி படம் கொஞ்சம் பொறுமையா போகும், உங்களுக்கு டபாங்,
ஓம் சாந்தி ஓம், சிங் இஸ் கிங்  மாதிரி படங்கள்தான் எப்பவும் பிடிக்கும் என்றால்,  இது கண்டிப்பாய் உங்களுக்கான படம் அல்ல. 
.

Tuesday, July 19, 2011

கால் சென்டரில் ஓர் இரவு (One Night @ the Call Center) !!!

சேத்தன் பகத் எழுதிய இரண்டாவது புத்தகம்தான் "One night @ the call center". சமீபத்தில, ஒரு நாலு நாள் விடுமுறைக்கு இந்தியா செல்கையில், தோகாவில் விமானம் ஏறிய உடன் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். விமானம் மஸ்கட் சென்று, வேறு விமானம் மாறி சென்னை தொடும் நேரத்தில் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். ஒரு இரவில் நடக்கும் கதைதனை நானும் ஒரே இரவில் படித்து முடித்தேன் (நாங்களும் ஒரே நைட்ல எதாவது செய்வோம் இல்ல !!!)
சேத்தன் ஒரு இரவில் ரயில் பயணம் செல்கையில், கூட பயணிக்கும் ஒரு சக பெண் பிரயாணி சொல்லும் கதைதனை, இந்த புத்தகமாக எழுதி இருக்கார் என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. எப்பொழுதும் போல கதை சொல்லும் பாணி, கதையின் அகத்தே உள்ள ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தின் நோக்கில் கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கால் சென்டரில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அதாவது ஒரு 12 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை கோர்த்து எழுதப்பட்டவைதான் இந்த புத்தகம். ஒரு இரவின் நிகழ்வுகளை 250 பக்கம் கொண்ட கதையாக எழுத முடியுமா என யோசிப்பவர்கள்......இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஷ்யாம், வ்ரூம், இஷா, பிரியங்கா, ராதிகா மற்றும் மிலிட்டரி மனிதர் ஆகிய ஆறு பேரும் ஒரு கால் சென்டரில் ஒரு டீமாக வேலை
செய்பவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சினை, விரக்தி, ஏமாற்றங்கள் என இருக்க, ஒரு இரவில் இதை அத்தனையும் சொல்லி, கடைசியில் ஏக போக த்ரில்லோடு கதை முடிகிறது. கதை முழுக்க முழுக்க இரவு ஷிப்டில் கால் சென்டரில் நடப்பவைதான். கதையின் இறுதியில் கடவுள் போன் செய்வது போல் ஒரு நிகழ்வு வருகிறது...இதையும் சேத்தன் இறுதியில் நியாயப்படுத்தியுள்ளார்.  கதையின் இறுதி அப்படியே  ஒரு ஹிந்தி படம்  பாக்கிற மாதிரி ஒரு
உணர்வு. சேத்தன் பெண்களை பற்றி  எழுதுவது மிகவும் ரசிக்கும்படி
உள்ளது. அவரின் மற்ற கதைகளில் எல்லாம்   ஒரு பெண்தான் பிரதானமாக  இருப்பார். இந்த கதையில் மூணு பெண்கள், ஆகையால் கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்தி எழுதி இருப்பார் போல.. கால் சென்டர் பற்றி நிறைய விஷயங்கள் கேட்டு, படித்து, பார்த்து எழுதி இருக்கார்....கிடைக்கிற கேப்ல எல்லாம் கால் சென்டருக்கு போன் செய்யும் அமெரிக்காகாரங்களை கிண்டல் அடிச்சி இருக்கார். கால் சென்டரில் நடக்கும் அரசியல், காதல், குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் என கலந்து கட்டி சொல்லி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியோடு முடிகிறது கதை.
Title: One night @ the call center
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2005
Pages: 257
Price: Rs .95

ஒரு சில சொற்ப இடங்களில் கதை கொஞ்சம் மெல்ல நகர்கின்றது, மற்றபடி கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் தான். ஒரு வழியாக சேத்தன் எழுதிய நான்கு புத்தகமும் படித்து விட்டேன். அடுத்த வெளியீடு தீபாவளிக்கு.....காத்திருக்கிறேன். எனக்கு பிடித்த வரிசையில் சேத்தனின் புத்தகங்களை கீழே வரிசைபடுத்தி உள்ளேன். (எல்லா புத்தக தலைப்பிலும் ஒரு எண் இருக்கிறது)
  • 2 States - The Story of My Marriage
  • Five Point Someone
  • One night @ the call center
  • The 3 Mistakes of my Life
.

Saturday, July 16, 2011

டெல்லி பெல்லி - "A" ஓன் மூவி !!!

சமீபத்தில் இந்தளவிற்கு வயிறு வலிக்க சிரிச்சிக்கிட்டே எந்தப்படத்தையும் பார்த்த மாதிரி ஞாபகம் இல்லை. டெல்லி பெல்லி படம் துவக்கத்திலிரிந்து முடிவு வரை அதகளம் தான். அமீர்கான் தயாரிப்பில் வெளி வந்திருக்கும் படம்தான் இந்த டெல்லி பெல்லி.
ஏர் ஹோஸ்டஸ் ஆக வேலை பார்க்கும் சோனியா (சேனாஸ்) தன் தோழிக்கு உதவும் நோக்கில், ஒரு கடத்தல் கும்பலின் பார்சல் ஒன்றை கைம்மாற்ற ஒப்புக்கொள்கிறாள்.(பார்சலில் என்ன உள்ளது எனத்தெரியாமலே!). சோனியா அந்தப்பார்சலை தன் காதலன் தஷியிடம்(இம்ரான் கான்) கொடுத்து சேர்த்து விடும்படி சொல்கிறாள். தஷி தன் நண்பனிடம் அந்த வேலயைக்கொடுக்க, அந்த நண்பன் இன்னொரு நண்பனிடம் கொடுக்க....கடைசியில் பார்சல் இடம் மாறி விட, தொடரும் குழப்பங்கள், கடத்தல் கும்பலின் துரத்தல் எனக்கதை சென்று சுபமாகின்றது. இதை முழுக்க முழுக்க நகைச்சுவையோடு சொல்லியிருக்கின்றனர்.

இந்தப்படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. எல்லாருக்கும் சமமான பாத்திரம்தான். ஒவ்வொரு சின்ன சின்ன பாத்திரங்கள் கூட அசத்தி இருக்காங்க. இம்ரான்கான் ரொம்ப அளவா நடிச்சி இருக்கார். அவருடைய நண்பர்களாக வரும் அருப்(விர் தாஸ்) மற்றும் நிதின்(குணால் ராய் கபூர்), மேனகா(பூர்ணா ஜகந்நாதன்), வில்லனாக விஜய் ராஸ் எல்லாரும் கலக்கி இருக்காங்க. படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் தான்..." F " வார்த்தை படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது...அது மட்டும் இல்ல, இன்னும் ஹிந்தியில இருக்கிற நிறைய கெட்ட வார்த்தை. மெட்ரோவில் இருக்கும் மாடர்ன் யூத் எப்படி பேசுவாங்களோ, அப்படியே வந்து விழுகின்றன வசனங்கள். அதே போல் படம் முழுக்க ஆங்கில வசனங்கள்தான்...ஒரு 10 சதவிகிதம் தான் ஹிந்தியே வருகிறது. டிபிக்கலா, இப்போதைய பாச்சிலர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதை அப்படியே கண் முன்னாடி நிறுத்தி இருக்கார் இயக்குனர்.

படத்துக்கு இதை விட பொருத்தமா தலைப்பும், கேப்சனும் வைக்க முடியுமா என எனக்கு தெரியல. படம் முழுக்க ஷிட், இர்று என அருவருக்க தக்க விஷயங்கள் வியாபித்து இருந்தாலும், அதையெல்லாம் மீறி சிரிக்க வைத்திருப்பது இயக்குனர் மற்றும் கதாசிரியரின் வெற்றியே. கல்லூரி நாட்களில் தினமும் M டிவில சாயங்காலம் இந்த படத்தின் நாயகி சேனாஸ் நடத்தும் மோஸ்ட் வான்டட் பார்த்ததுண்டு. அதுக்கப்புறம் இந்த படத்தில்தான் பார்த்தேன்...படம் முழுக்க புள்ள திமிரிக்கிட்டே இருக்கு இந்த வயசிலயும். இன்னொரு நாயகியா வரும் பூர்ணா ஜகந்நாதன் ஏதோ வெளியூர் பொண்ணாம்..செம தைரியமா நடிச்சி இருக்கு. அப்புறம் அந்த குண்டு நண்பர்... விழுந்து விழுந்து சிரிக்க வச்சிருக்கார், அதுவும் அந்த இறுதிக்கட்சியில துரத்தல் நேரத்திலயும் ஒரு வீட்டு கழிப்பறைக்கு போயிட்டு வெளியில வந்து தேங்க்ஸ்னு சொல்லுவர் பாருங்க...செம கலக்கல். இது மாதிரி படம் முழுக்க சிரிக்க நிறைய இடங்கள் உண்டு. விஜய் ராஸ் கலக்கல் வில்லனா நடிச்சி இருக்கார்.செம டயலாக் டெலிவெரி.(ஏற்கனவே டெல்லி-6 மற்றும் மும்பை எக்ஸ்பரசிலும் கலக்கலா நடிச்சி இருப்பார்). எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் படத்தில் பிடிக்கலை...இறுதியில் அமீர்கான் வரும் பாட்டு. திருஷ்டிக்கு வச்சிட்டார் போல.(நிறைய பேர் இது நல்லா இருக்குனு சொன்னாங்க).

மத்தபடி படத்தின் எல்லா துறையும் அசத்தல்...கலை இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங். இசை யாரோ ராம் சம்பத்தாம்..பின்னணி இசை சுபெர்ப்....அதுவும் வில்லன் விஜய் ராஸ் வரும்போதெல்லாம் ஒரு இசை வரும் பாருங்க....அற்புதமா போட்டு இருக்கார்.அமீர்கானுக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு....மனுஷன் வித விதமா படம் எடுக்குறார்...இந்த மாதிரி ஒரு படம் எடுக்க தில் வேணும். நம்ம ஊர்ல, இது மாதிரி ஒரு படம் எடுத்தா முதல்ல பேர மாத்தனும்...(சென்னை வயிறு....நல்லா இருக்கும்???), அப்புறம் தமிழ் படத்தில தமிழே வரலன்னு கொடி பிடிப்பாங்க....அப்புறம் கெட்ட வார்த்தைகள், வல்கர் காட்சிகள் என எல்லாத்துக்கும் ஆப்படிக்கவே இங்க பெரிய கும்பல் வேலை இல்லாமா கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் இருக்கு. நல்லா சத்தம் போட்டு சிரிச்சி பார்த்தேன் இந்த படத்தை, ஆனால் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்தான். சின்ன பிள்ளைகளை படம் பார்க்க கூட்டிக்கிட்டு போன அப்புறம் அவங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்லி மாளாது !!!!