Sunday, March 25, 2012

நானும் பறவையே !!!



நான் பறவை....
நாடு கடத்தப்பட்ட பறவை....
கண்ணைக்கட்டி கூட்டுக்குள்
அடைக்கப்பட்ட பறவை...
சுதந்திரமாய் பறக்க
மறந்து போன பறவை...
சிற்றின்ப உலகத்தில்
சிதைந்து போன பறவை...
நல்லார் தீயார்
பேதம் அறியா பறவை...


பறவைக்கும் மனம் உண்டு...
ஆம்...எனக்கும் மனம் உண்டு....
அதில், என்றும் நீ உண்டு...
எனது இறக்கைகள் ஒவ்வொன்றாக
வெட்டப்பட்டாலும்
உனக்காக நான்
மேன்மேலும் பறப்பேன்...
உலகம் சுயநலத்திற்காக
என்மீது சவாரி செய்தாலும்
என் பயணம் உனை  
நோக்கித்தான் என்றும்....
கண்காணா ஜோடிப்பறவையே
உனைநோக்கித்தான்
என் பயணம் என்றும் !!!
எங்கு நீயோ....
அங்கு நீயே
நானாக விழைகிறேன்...
என் மனத்தீயை
உன் அருகாமை எனும்
குளிர்த்தீயில் இழக்க விழைகிறேன்...
எனக்காக காத்திருப்பாய் என
உனை நோக்கி பறக்கும்
பறவை நான்...
ஆம்....நானும் பறவையே !!!
.