நீ விட்டு சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
முதலில் காதலை நான்தான் சொல்ல வேண்டும் என்றாய்
நான் சொல்ல விழையும் முன் நீயே சொன்னாய்
அதை ரசித்தேன்
ஐந்தரை மணிக்கு வருவேன் என்பாய்
ஆறரைக்கு வருவாய்
அதை ரசித்தேன்
மென்சோகம் கொண்ட முகத்தில்
மெலிதாய் ஒரு புன்னகை சரிய விடுவாய்
அதை ரசித்தேன்
நான் இல்லாத நேரத்தில் எங்கே என
ஓரக்கண்ணில் நோட்டம் விடுவாய்
அதை ரசித்தேன்
ரயில் பயணங்களில் நான் பேசப்பேச
என் தோள்களில் தூங்கி விடுவாய்
அதை ரசித்தேன்
மணமேடையில் உன் கையை மெலிதாய் சீண்டினேன்
வெட்கத்தில் நீ சிவந்தாய்
அதை ரசித்தேன்
உன்னைப்போல அழகான தேவதையை ஈன்றேடுத்தாய்
என் அளவில்லா அன்பின் பரிசென்றாய்
அதை ரசித்தேன்
எனைப்பிரிந்து எப்படி ஒரு வாரம் இருப்பாய் என்றாய்
அசை போட உன் லட்சோப லட்ச நினைவுகள்
எப்போதும் என்னோடு உண்டென்றேன்
அதை நீ ரசித்தாய்.....
நீ இல்லாத போதும் வெறுமை
என்னை தொடுவதில்லை
ஏனென்றால்
நீ விட்டுச்சென்ற நினைவுத்தடத்தில்
நடக்கின்றேன் நான்......
.