Sunday, April 7, 2013

எண்ணச்சிதறல்கள்-4 !!!


மார்கழி குளிரில்
தொடங்கியது
உன் மீதான
என் பார்வை

மாசியின் ஒரு மாலையில்
உன்னை கண்டதும்
மலர்ந்தது
உன் மீதான
என் காதல்

வைகாசி வெயிலில்
சில்லென வந்தது
என் மீதான
உன் சம்மதம்

ஆணியில் அழகாய்
நிச்சயமாய் பூத்தது
நம் மீதான
நம் நம்பிக்கை

ஆவணியில் அனைவரும்
வாழ்த்த நிறைவாய்
அரங்கேறியது நமக்கான
நம் திருமணம் எனும்
அன்பு பந்தம்

மாதங்கள் பல
வந்தாலும்
வருடங்கள் பல
கடந்தாலும்
வாழ்வில் ஒன்றாய்
ஓருயிராய் இருப்போம்

வற்றாத நதியாய்
என்றென்றும் எங்கெங்கும்
ஓடி திரிவோம்
காற்றாய் காதலாய்
எங்கும் கலந்திருப்போம் !!!
  
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥