Sunday, April 12, 2009

உன்னை போல் ஒருவன்


உன்னை போல் ஒருவன் - இது தாங்க தலைவர் கமலோட அடுத்த பட தலைப்பு. கமல் படம் என்ற உடன் எத்தனை தகவல்கள், செய்திகள், (90% தவறான செய்திகள் தான்). ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் இது A Wednesday என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்று. கடந்த 4-5 மாதங்களில் UTV vs கமல் கதை உரிமை தொடர்பாக தகராறு, அஜித் நடிக்கிறார், தலைவன் இருக்கின்றான், இளையராஜா இசை, AR ரஹ்மான் இசை அது இது என்ற ஏகப்பட்ட பொய்யான தகவல்கள். தலைவர் படத்தை பொறுத்த வரை, தலைவரே சொல்றது தான் உண்மை எப்போதும்.

நான் ஏற்கனவே A Wednesday படத்தை ஹிந்தியில் பார்த்தேன். எனக்கு அந்த படம் மிகவும் பிடித்து இருந்தது. குறிப்பாக நசீருதின் ஷா நடிப்பு மிகவும் அருமை. ரொம்ப casual ஆன ஒரு கதாபாத்திரம். வசனங்கள் மிகவும் கூர்மையாக இருந்தது, குறிப்பாக கடைசி கட்சிகளில். அனுபம் கெர் கதாபாத்திரமும் மிகவும் அழகான ஒன்று. இந்த கதை மும்பை நகரத்திற்கு 100% பொருந்த கூடிய ஒன்று. இதை தலைவர் எப்படி சென்னைக்கு மற்றும் ஹைதராபாத்துக்கு பொறுத்த போகிறார் என்று ஆவலுடன் எதிர் பார்கிறேன்.

என்னை போன்ற கமல் பக்தர்களுக்கு already heart beat got increased. இசை அறிமுகம் ஸ்ருதி ஹாசன், teaser trailer இசை கொஞ்சம் மாறுபட்டதாக, கேட்பதற்கு புதிதாக இருந்தது. படத்தில் பாடல்கள் இல்லை...பட விளம்பரத்திற்காக ஒரு பாடல் இடம் பெற கூடும், மற்றும் பின்னணி இசை சேர்ப்பு தான் ஸ்ருதியின் முக்கிய பணி. தலைவரை போல் தான் சார்ந்த துறையில் கலக்குவார் என்று எதிர் பார்ப்போம்.

அனுபம் கெர் கதாபத்திரத்தில், தமிழில் மோகன்லால், தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கின்றனர். சந்தகமே வேண்டாம், மோகன்லால் மிகவும் திறமையாக நடிப்பார், அனால் வெங்கடேஷ் எந்த அளவிற்கு நடிப்பார் என்று தெரியவில்லை. இந்த படத்தின் இயக்குனர் எப்போதும் போல் கமல் படங்களில் பேருக்கு ஒரு ஆள். இந்த தடவை தசாவதாரத்தில் வந்த ஷிட் ராம்.....மன்னிக்கவும்...சாய் ராம்.(சக்ரி). இவர் ஏற்கனவே சலங்கை ஒலி படத்தில் சின்ன பையனாக தோன்றியவர். ஓட்டை கேமரா வைத்து கொண்டு சலங்கை ஒலியில் தலைவரை போட்டோ எடுப்பவராக நடித்து இருப்பார்.

தலைவர் கமல் வயதிற்கு மிகவும் பொருந்த கூடிய கதாபாத்திரம். வசனங்கள் கமலே எழுதினால் நன்றாக இருக்கும். "உன்னை போல் ஒருவன்" போன்ற படங்கள் மக்களிடம் கண்டிப்பாக சேர வேண்டிய படம் மற்றும் கருத்துள்ள படம். Let us hope the movie comes ASAP and win people's hearts. தலைவருக்கு இந்த கதையை தேர்வு செய்ததிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

Thursday, April 9, 2009

இந்திய அணியின் நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்










நடந்து முடிந்த நியூஸிலாந்து சுற்றுபயணத்தில் நம்ம இந்திய அணி வீரர்கள் அசத்திட்டாங்க !!! போன தடவை வந்த அணிக்கும் இந்த அணிக்கும் எவ்வளவு வித்தியாசம்னு நியூஸிலாந்து பார்வையாளர்கள் திகைத்து விட்டனர்.

41 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த டெஸ்ட் தொடர் வெற்றி...இந்திய அணிக்கு மிகுந்த சவால்களை கொடுக்கும் நியூஸிலாந்து மைதானங்களில் கிடைத்த வெற்றி....கண்டிப்பாக இந்திய அணி கலக்குகிறது தான். (Indians on a Roll)

டெஸ்ட் தொடரில் மொத்தம் 15 நாட்களில் நியூஸிலாந்து ஆதிக்கம் இரண்டு நாட்கள் தான். 1-0 என்பதை விட 2-0 என்பதுதான் சரியான முடிவு. என்ன செய்ய?? நம்ம ஜெய்க்கும் போதும் தான் மழை வந்து தொலைக்குது.

இந்த மாதிரி இந்தியா ஜெய்க்கும் நேரத்தில் ஒரு சில session la , சில தவறுகள் செய்யும் சமயத்தில், இந்த அருண்லால் மாதிரி மொக்க பசங்க உலக பேச்சு பேசறாங்க....அத கேட்கும் போது காதில மட்டும் புகை வரல......எல்லா இடமும் எரியுது !!! இந்த மாதிரி வெண்ணைங்க என்னத்த கிழிச்சிட்டு இந்த பேச்சு பேசறான்னு தெரியலை. சோனி டிவி மாதிரி ஆளுங்களுக்கு வேற நல்ல ஆளே கிடைக்கலையா?? நாரயணா இந்த கொசுவெல்லாம் மருந்து அடிச்சி கொன்னா தான் என்ன ??

தோணி நல்ல அணி தலைவர் தான்....நல்லா வழி நடத்துறார். அனால் டெஸ்ட் வெற்றி சீனியர்ச்க்கு தரும் நல்ல பரிசாக இருக்கணும்னு சொன்னது கொஞ்சம் ஓவர் தான். நான் ஏன் இத சொல்ல வரேன்னா, இந்த தொடரில் கம்பீற்கு அடுத்ததா அதிக ரன் குவித்தவர்கள் சச்சின், டிராவிட் மற்றும் லக்ஷ்மன் மூணு பேர் தான். அப்புறம் என்ன சீனியார்ச்கு பரிசு அது இதுனு ஓவர் சீன் போடறது !!! என்னவோ சீனியர்ஸ் யாரும் ஆடாத மாதிரி, ஜுனியர்ஸ் மட்டும் தான் ஆடுற மாதிரி. இப்படி எதாவது லூசுதனமா பேசாம நம்ம அணி தொடர்ந்து வெற்றி பெற்றா நல்லது தான். ஏற்கனவே எல்லா பய புள்ளய்களும் டாப் - 3 ல ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்கா கூட நம்மளையும் சேர்த்து சந்தோஷம் தான்.

இந்த தினேஷ் கார்த்திக் மூதி யா என்ன தான் பண்ணருதுனே தெரியலை. போன போகுது... நம்ம பையன் ரஞ்சி ல நல்லா விளையடுதேனு, ஸ்ரீகாந்த் அண்ணன் நியூஸிலாந்து அனுப்பி வச்சா, கிடைச்ச ஒரு வாய்ப்பையும் விட்டுட்டான். ரொம்ப கஷ்டம் டா நாராயணா!!!

ஈராக் : சதாம் + சதாம் -


இந்த புத்தகத்தை பா.ராகவன் மிக அழகா, எளிமையான நடையில் எழுதி இருக்கார். ஈராக்கை பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். புத்தகம் படித்த பிறகு ஒரு வாரமா எனக்கு சதாம் பத்தின நினைப்பு தான் ஓடிகிட்டு இருக்கு. பா.ராகவன் சொல்றா மாதிரி அவரை ஹீரோவாகவும் பார்க்க முடியாது!!! வில்லனாகவும் பார்க்க முடியாது!!! சதாம் நிஜமாகவே ஒரு சகாப்தம் தான். அமெரிக்க என்ற நாசக்கார நாடால் வளர்க்கப்பட்டு, பின் அதே நாசக்கார நாடால் அழிக்கவும் பட்டவர் தான் சதாம்.

சதாமை மாதிரி ஒரு சர்வாதிகாரி பார்ப்பது மிக கடினம். அனால் ஈராக்குக்கு அவர் மாதிரி ஒரு தலைவர் கிடைப்பதும் மிக மிக கடினம். எத்தனை போர்கள், எத்தனை உயிர் படுகொலைகள்......நினைத்தாலே நெஞ்சு துடிக்கும். சதாமை எந்த எல்லைக்குள்ளும் வரையறுக்க முடியவே முடியாது !!! யாராலையும் புரிந்து கொள்ள முடியாத இரும்பு மனிதர் அவர். மொத்தத்தில் அவர், தலை சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி, நவீன ஈராக்கின் சிற்பி, also சர்வாதிகாரி மற்றும் கொலைகாரர்.

இந்த புத்தகத்தை படித்ததில் இருந்து, சதாம் நல்லவரா, கெட்டவரா (நாயகன் ஸ்டைலில்) என்ற எண்ணம் என் மனதில் ஓடி கொண்டே இருக்கிறது. Open mind கொண்டு படிக்கும் எவருக்கும் இந்த எண்ணம் வரலாம் என்றே நான் நினைக்கிறேன்.

வரலாற்றில் நாட்டம் இருப்பவர்கள் இந்த புத்தகத்தை மிகவும் விரும்புவர்கள். என்னனை போன்ற வளைகுடா வாசிகள் கண்டிப்பாக ரசித்து படிக்க முடியும். மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், என்னை போன்ற ஏற்கனவே அமெரிக்கா பிடிக்காதவர்கள் இந்த புத்தகத்தை படித்தால் இன்னும் அமெரிக்கா வெறுப்பு அதிகமாகும்.

நிறைய புத்தகங்கள், வலைத்தளங்கள் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்து இந்த புத்தகத்தை எழுதிய பா.ராகவன் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.