Tuesday, June 12, 2012

எண்ணச்சிதறல்கள்-3 !!!


தென்றலிலே மிதந்து வரும் தேவதை
எனக்கூற கேட்டிருக்கிறேன்
ஆனால் இங்கே...
தேவதையே தென்றலாக வருகிறது
என் முன்னே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

கண்மூடி எனை நினைத்து
உறங்கடி தோழி
கனவில் என்னை காண.....
நானும் கண்மூடி
எனை மட்டும் நினைத்து
உறங்குகிறேன் கனவில்
உன்னை மட்டும் காண !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

நான் வார்த்தை வர
திண்டாட்டத்தில் இருந்தால்
எனக்கான வார்த்தைகள் கூறி
நீ முடிப்பாய்,
அது பிடித்து இருக்கு !!!

இம் என்ற ஒற்றைச்சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்களை
புரியவைக்கிறாய்,
அது பிடித்து இருக்கு !!!

தொடரும் நமது உறவு
பந்தத்தில் எனக்கான
உரிமைகள் நீ தருவது
பிடித்து இருக்கு !!!

காதல் பேசுகையில்
தொடர்ந்து நீ பேசும்
அர்த்தங்கள் புரியாமல் விழிக்க
"ஐ லவ் யு" என்பதை
வேறுவிதமாக சொன்னேன் என
நீ சொல்வது பிடித்து இருக்கு !!!

உனக்கான மாலை
சூடும் வேலையில் எனக்கான
வெட்கத்தையும் சேர்த்து
நீயே எடுத்து கொள்கிறாய்
அதுவும் பிடித்து இருக்கு !!!

என் காதல் உன் காதல்
என பிரித்து சொல்லாது
நம் காதல் என நீ சொல்வது
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.

Sunday, June 3, 2012

எண்ணச்சிதறல்கள்-2 !!!

விடிகின்ற பொழுது உன்னோடு
விடிய வேண்டும்...
நினைக்கின்ற பொழுது
நீ என்னுடன் வேண்டும்...

நாளை நடப்பவை
நமக்கே ஆனாலும்
நிந்தன் அருகாமை
இல்லாத பொழுதுகள்
என்னுடன் இருந்தால் என்ன?
இல்லாமல் என் இளமைதான்
சுட்டால் என்ன?

நீ பார்த்த பார்வைகளும்
உன் கண்கள் பேசிய
மொழிகளும் சிறிது
நேரம்தான் என்றாலும்
உந்தன் காதல்
பூத்த கணம்
என்னுள்ளே இன்றும்
இன்னும் இனிக்குதடி

இரு தோளிலும்
பூமாலைகள் சேரும்
காலம் வரும் வரை
உனக்கான என் காத்திருப்பும்
எனக்கான உன் காத்திருப்பும்
சிறிதே கசந்தாலும்
இனிக்கவே செய்கிறதடி
நான் உன்னை அடையும்
அந்நாளை எண்ணி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

தென்றல் வீசினாலே
தாங்காத என் மனசு
தமிழே தென்றலாய்
வீசினால் என் செய்வேன்???

அழகிய வண்ணம் கண்டாலே
சொக்கும் மனதை
வானவில் வண்ணமாய் நீ
வந்தால் என் செய்வேன்???

நல்லிசை கேட்டாலே
மயங்கும் மனதை
உன் குரல் ஒலிக்கும் நேரம்
மட்டும் எவ்வாறு
கட்டுக்குள் வைப்பேன்???

நீ பார்த்த பார்வைகள்
நீ பேசிய பொழுதுகள்
நீ கூறிய வார்த்தைகள்
எங்கும் நீயாய் இருக்கையில்
என்னுள் மட்டும் நீ அல்லாது
வேறொருவர் இருக்க
வாய்ப்புகளும் உளவோ?

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

.