Friday, April 20, 2012

எண்ணச்சிதறல்கள் !!!

 

உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும்
இரயில் தண்டவாளம் போல்
சேர்ந்தே பயணிக்கிறது...
கடைசிவரை
ஒன்றை ஒன்று
தொடாமலே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 
போ போ என்கிற
உன் உதட்டின்
வார்த்தைக்கும்
வா வா என்கிற
உன் கண்ணின்
மொழிக்கும்
வித்தியாச அர்த்தங்கள்
தேடியே என் நாட்கள்  
நீளுதடி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உலகில் மொழிகள் பல...
முயற்சிகள் செய்து அதில்
நான் கற்றது சில...
எல்லாவித முயற்சிகள்
செய்தும் ஒன்றில் மட்டும்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அது உன் கண்கள் 
பேசும் மொழியன்றி 
வேறென்ன தோழியே ??? 

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கான ஒவ்வொரு
காத்திருத்தல் முடிவிலும்
நீ என்னிடம்
மன்னிப்பு கேட்கும் முன்
நான் உன்னிடம்
நன்றி சொல்லுவேன்.....
ஏனெனில் உனக்கான
என் காத்திருத்தல்
முழுதும் உன் எண்ணங்களே
நிறைந்திருப்பதால் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
டிஸ்கி : கவிதை எழுதணும்னா, காதலிச்சாதான் முடியும்னா  அப்ப சரித்திரம், த்ரில்லர், க்ரைம் எழுதுறவங்க எல்லாம் அதெல்லாம் செஞ்சிப்பார்த்தா எழுதுறாங்க ??
சும்மா தகவலுக்கு....!!!
.

Thursday, April 12, 2012

நீ...நான் !!!


தேவதையாய் யாராவது  
பார்த்ததுண்டோ?
தினமும் நான்
உன்னுருவில் பார்க்கின்றேன்....

மின்னலை யாராவது
அருகில் கண்டதுண்டோ?
தினமும் நான்
உன் கண்களில் காண்கின்றேன்...

முழுமதியோடு யாராவது
பேசியதுண்டோ?
தினமும் நான்
உன்னுடன் பேசுகின்றேன்....

மலர்கள்  சிரிப்பதை யாராவது
கண்டதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு சிரித்து மலர்கின்றேன்...

தென்றல் காற்றோடு யாராவது
வாழ்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு வாழ்ந்து மகிழ்கின்றேன்...

ஓவியங்கள் என்றாவது
காதல் செய்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு காதலில் திளைக்கின்றேன்...

ஆம்..நீ எனக்கு

தேவதை
மின்னல்
முழுமதி
மலர்கள்
தென்றல்
ஓவியம்
இன்னும் பல...

நான் மட்டும்
உனக்கு என்றுமே
நான்தான்.....உன்னனைத்துமே
நான் மட்டும்தான் !!!
.

Sunday, April 8, 2012

உன் எண்ணத்தீண்டாமை !!!

நண்பனே,

குருதியைப்போலத்தான்....
உனது எண்ணங்கள்
என்னுள் பாய்கின்றது....
மூச்சின் கடைசி சுவாசம்
எனைவிட்டு பிரிந்தாலும்
உனது நினைவுகள்
எனைவிட்டு பிரியாது...

உயிரின் கடைசி
நொடி வரை உன்
நினைவுகள் என்றும்
எந்தன் உள்ளத்தின்
உள்ளுக்குள் ஓர்
அழியாச்சுடர் விளக்கே...
அழிக்க உனக்கோ
எனக்கோ யாதும்
துர் நிகழ்வில்லை...

சிறுசிறு இன்பங்கள்
எதிர்பார்க்கும் இப்பூவலகில்
உன் சிரிப்பைத்தவிர
நான் எதையும்
எதிர்பார்த்ததில்லை...
உன் மகிழ்ச்சியில்
பல பொழுதுகளை
தொலைத்தவன் நான்...

இன்று
எனக்கும் அறியாது
என்மேல் உனக்கு ஏன்
இத்தனை வன்மம்...
நான் உனக்கு
நினைத்தது யாவும்
நன்மையன்றே தவிரே
யாதும் தீதில்லை....

உன் கோபங்களை
எனக்கும் விளக்காது...
ஊருக்கும் சொல்லாது...
இன்று எனை மட்டும்
தனியாய் விடுத்து
சென்றது ஏனோ ???

உன்னுள் இருக்கும்
எண்ணங்கள் எனை
தீண்டாமல் செல்வது
நியாயமோ???
தீண்டாமை ஒரு பாவச்செயல்
என உனக்கு தெரியாதா???
உன் எண்ணத்தீண்டாமை
எனைக்கொல்லுதடா....

வேற்றுருவில் வந்தாலும்
வேறு பல சென்மம் எடுத்தாலும்
எனக்கு ஒரு பதில்
கூறி செல்லடா !!!
நான் செய்த பிழை
என்னதான் என எனக்கு
விளக்கிச்செல்லடா !!!
.