Saturday, October 29, 2011

வேலாயுதம் !!!

சூப்பர் ஹீரோ, ராபின்ஹுட் கதை தாங்க நம்ம டாக்டர் விஜய்
நடித்து வெளி வந்திருக்கும் வேலாயுதம் படத்தின் அவுட்லைன்.
முதல் பாதி விஜய் மற்றும் கோஷ்டியின் காமெடி, இரண்டாம் பாதி
விஜயின் ஆக்க்ஷன் எனப்படம் செல்கிறது. பாகிஸ்தான்
எல்லையிலிருந்து படம் ஆரம்பிக்கிறது, பாகிஸ்தான்ல
அரைகுறை தமிழ் பேசும் தீவரவாதிகள், தமிழ்நாட்டின் 
அமைதியை குலைக்க தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 
ஆங்கங்கே வெடிகுண்டுகள் வைக்க திட்டம் தீட்டுகின்றனர்.
இதற்கு தமிழ்நாட்டின் உள்துறை அமைச்சரும் துணை
போகின்றார். இதன் நடுவில் பத்திரிக்கை துறையில் இருக்கும்
பாரதி(ஜெனிலியா) தன் நண்பர்களுடன் சேர்ந்து இந்த
அமைச்சர் ஆட்களின் அந்நியாயத்தை வெளிக்கொணரும்
வேலையில் இறங்கி மாட்டிக்கொள்கின்றனர். மற்ற நண்பர்கள்
இறந்து போக, ஜெனிலியா கத்தி குத்துடன் எஸ்கேப் ஆக, அவர்களை கொல்ல வந்த வில்லன் ஆட்கள் எதேச்சையாக
விபத்தில் வண்டியுடன் எரிந்து போகின்றனர். ஜெனிலியா
அவர்களை கொன்றது 'வேலாயுதம்' என எதேச்சையாக
எழுதி வைக்கிறார், கூடவே இனி அடுத்து அடுத்து  திட்டமிடப்பிட்ட  வெடிகுண்டு சதிகளையும் வேலாயுதம்
முறியடிப்பார் என எழுதி வைக்கிறார்.
அப்படியே கட் பண்ணா, கிராமத்தில் வேலாயுதம்(விஜய்) தன்
தங்கை காவேரி (சரண்யா மோகன்) கூட சேர்ந்து லூட்டி அடித்து
ஊரையே கலக்குகின்றனர். விஜயின் முறைப்பொண்ணு  வைதேகி(ஹன்சிகா) அவரயே சுத்தி சுத்தி வந்தாலும், எல்லா தமிழ் பட போல ஹீரோ தன் காதலை வெளிக்காட்டாமல் மனசுக்குள்ளேயே வைச்சிக்கிறார். விஜய் தன் தங்கை கல்யாணத்திற்க்காக
சென்னையில் சீட்டு போட்டு சேர்த்து வைத்த காசை  எடுக்க தன் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்னை வருகின்றார்.
சென்னை வந்தவுடன் விஜய்க்கே தெரியாமல் அவர் செய்யும்
ஒவ்வொரு வேலையும் வெடிகுண்டு வைக்கும் கும்பலின் சதியை
முறிப்பதோடு அவரே  ஜெனிலியா உருவாகிய கற்பனை பாத்திரமான வேலாயுதமாக மாறுகிறார் அவரே அறியாமல். ஒரு கட்டத்தில் இதை ஜெனிலியா அவருக்கு புரிய வைக்க, விஜய் தான் வந்தது தன் தங்கை கல்யாணம் விஷயமாக எனச்சொல்லி சீட்டுக்கம்பெனியில் காசு எடுக்க செல்கின்றார். அங்கே சீட்டுக்கம்பனியும் ஊத்தி மூடி விடுகின்றனர். இதுவும் உள்துறை அமைச்சரின் சதிகும்பல் வேலை என விஜய்க்கு தெரிய வர, வேலாயுதமாக ஆக்ஷன்  அவதாரம் எடுத்து எல்லாரையும் வதம் செய்தாரா, தங்கையின் திருமணம் நடந்ததா, ஹன்சிகாவை கரம் பிடித்தாரா என்பது மீதிக்கதை.
டாக்டர் எப்பவும் போல நகைச்சுவை மற்றும் நடனத்தில் பிச்சி எடுக்கிறார்....இன்னும் கொஞ்சம் நல்ல நடன அமைப்பு
வைச்சிருக்குலாம்,  யானைக்கு சோளப்பொறி தான். நடுவே
நடுவே பன்ச் வசனம்லாம் விடறார் போற போக்கில்.(உதாரணம் : நல்லவேளை, நான் ஆளுங்கட்சி). படத்தின் இறுதிக்காட்சியில
6 பேக் லாம் காட்ட முயற்சி செய்து, ஒரு ரெண்டு மூணு பேக்
காட்றார். படத்தில் வர்ற மிக முக்கிய நகைச்சுவையே அந்த ரயில
டாக்டர் நிறுத்துவது தான். Don 't Miss it. ஜெனிலியாக்கு நல்ல ரோல், நல்லாவே நடிச்சிருக்காங்க, ஆனால் படம் முழுக்க ரொம்ப டல்லா இருக்காங்க, கண்ணுக்கு கீழ கருவளையம்லாம் தெரியுது.
ஹன்சிகாதான் படத்தில் செம ஹாட்டு மச்சி !!!
சந்தானம் எப்பவும் போல கவுண்டமணி பாணில லெப்ட்
அண்ட் ரைட் நகைச்சுவைல வெளுத்து வாங்குகிறார். மத்தபடி
படத்தில இன்னும் பெரிய பட்டாளமே நடிச்சி இருக்கு.
கதைக்கு பெருசா மெனக்கெடவில்லை, திருப்பாச்சி கதையவே
கொஞ்சம் உல்டா பண்ணி, அதன் மேல பாகிஸ்தான் தீவரவாதி
கும்பல்னு மசாலா தூவி, உப்பத்தூக்கலா போடற மாதிரி காமடியே கொஞ்சம் தூக்கி வைச்சி, காரமா கொஞ்சம் ஹன்சிகாவை உரிச்சி
ஆட விட்டு படம் பண்ணியிருக்கிறார்கள். முதல் பாகம்
நகைச்சுவையால் போவதே தெரிவதில்லை...ஆனாலும் அந்த
கிராமத்தில் நடப்பது கொஞ்சம் திராபை நகைச்சுவை தான்.
இரண்டாம் பாகம் முழுக்க சண்டை தான்...டாக்டர்  தூக்கின
கையையும் காலையும் இறக்கவே மாட்டேன்றாறு. பாக்கிற
நம்மால தான் முடியல. ரெண்டு மூணு பாட்டு நல்லா இருக்கு, அதுவும் ஹன்சிகா  வர்ற  சில்லாக்ஸ் பாட்டினால அரங்கமே
சூடாகுது.....முடியல !!!  சுபா வசனங்கள் ஆங்காங்கே நச்சுன்னு
இருக்கு. எடிட்டிங் பண்ணவரு இரண்டாம் பாதி செய்யும் போது
தூங்கிட்டாரு போல. ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான  
பரபரப்பான ஒளிப்பதிவு கொடுத்து இருக்கார் பிரியன்.
எப்பவும் தெலுகு படங்களை ரீமேக்கும் இயக்குனர் ராஜா ரொம்ப கடுமையா உழைச்சி இந்த படத்தை எடுத்து இருப்பார் போல, 
ரெண்டாம் பாதியில்தான் கோட்டை விட்டுட்டார் மனுஷன்.    

படத்துக்கு ரொம்ப பெரிய பட்ஜெட், செலவு அதிகம்னு பேசிக்கினாங்க, 
எங்க  செலவு செஞ்சி இருக்காங்கன்னு யாராவது விலக்கி 
சொன்னாத்தேவலை.  படம் இரண்டாம் பாதி இழுவையை சரிக்கட்டி இருந்தா இன்னும் கொஞ்சம் பெரிய லெவல்ல ஹிட் ஆகியிருக்கும். ஆனால் சுறாக்கள், வில்லுகளுக்கு இந்தப்படம் பரவா இல்லை !!!