Monday, August 19, 2013

தலைவா !!!

தலைவா படத்தின் தொடக்கத்தில், இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி என்று பெயர் போடும்போது சொல்கின்றனர். எதுக்கு மணிரத்தினத்திற்கு நன்றி சொல்றாங்கன்னு தொடக்கத்தில் புரியல. படம் முழுக்க பார்த்து பிறகுதான் ஏன் என்று தெரியுது. மணி அவர்கள்  'THE GODFATHER' பார்த்து ஈர்க்கப்பட்டு 'நாயகன்' எடுத்ததை போல, இயக்குனர் விஜய் அவர்கள் 'நாயகன்' மற்றும் இன்னும் சொச்ச தமிழ் படங்கள் பார்த்து ஈர்க்கப்பட்டு 'தலைவா' எடுத்திருப்பார் போல. இதுல பெருசா ஒன்னும் குறை சொல்ல ஏதும் இல்லை, ஏற்கனவே விஜய் அவர்கள் இதுவரை எடுத்த எல்லா படங்களுமே ரீமேக் அல்லது பிற மொழி திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு எடுத்தவை தான், தாண்டவம் தவிர. இதனால படம் பார்க்க போகும்முன் எனக்கு பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் பார்த்தேன். 
 படம் நல்லாத்தான் இருக்கு, என்ன கொஞ்சம் படத்தின் நீநீநீநீளத்தை குறைத்து crispஅ எடுத்திருந்த பெரும் வெற்றி பெற்றிருக்கும். தளபதி விஜய் அவர்கள், எப்பவும் போல அளந்து தொழில பார்த்திருக்கார். அமலா பால்லாம் காவல்துறை கெட்டப்பில் பாக்கறது செம காமடி. நகைச்சுவைக்கு சந்தானம் அங்கங்கே வந்து கிச்சுகிச்சு செய்கிறார். சத்யராஜ் விஜயின் அப்பாவாக நிறைவாகவே நடித்திருக்கார். அந்த வடநாட்டு பொண்ணு விஜயை லவ்வறது எல்லாம் படத்திற்கு தேவையே இல்லை. நடிப்பு & நடன புயல் சாம் அன்டர்சன் வேற வந்து நகைச்சுவை செய்றார். 

 நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு செமையா இருக்கு. GV பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்களைத்தவிர மத்தது எல்லாம் பெரிய சொதப்பல், பின்னணி இசை பரவாயில்லை, ஒரு சில இடங்களில் ரொம்ப நல்லாவே இருக்கு. ஒரு பாட்டுல விஜய் கூட ஆடவும் செய்றார் புதுமாப்பிள்ளை GV பிரகாஷ். இயக்குனர் விஜய் கொஞ்சம் இரண்டாம் பாதி திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
படத்தின் கூட்டல் : விஜய், சந்தானம், சத்யராஜ், ஒளிப்பதிவு 
படத்தின் கழித்தல் : படத்தின் நீளம், திரைக்கதை, தேவையில்லாத நிறைய கதாபாத்திரங்கள், சில பாடல்கள். 

 மக்கள் எல்லாம் பரவலா பேசிகிட்ட அளவுக்கு படம் ஒன்னும் மொக்கை இல்லை. சுறா, குருவி, ஆதி, வில்லுகளுக்கு இந்தப்படம் எவ்வளவோ தேவலை, ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.
.

Monday, July 1, 2013

நினைவோடை !!!


தேவதைகள் வெண்ணிற
உடைகள் மட்டுந்தான்
உடுத்தும் என்று
நினைத்திருந்தேன்

அந்நாளில் உன்னைக்கண்ட
பின்தான் தேவதைகள்
பிங்க்நிறத்தில் கூட
உலவும் என
உணர்ந்தேன்

நான் உனக்கும்
நீ எனக்கும்
உறுதியான நாள்
இரு உள்ளங்கள்
இணைந்த நாள்
உன்னை மிக அருகில்
ரசித்த(தரிசித்த) நாள்

பின்னாளில் நிறைய
கைக்கோர்த்து திரிந்தோம்
ஆனாலும் அந்நாளை
நினைக்கையில் - இப்பவும்
ஏதோ ஓர் சுகமான
உணர்வலை உடல்
முழுக்க சூடாய்
பரவுதடி

ஓராண்டு ஓடிவிட்டதடி
பெண்ணே - இந்நாள்
நம்  வாழ்வின்
மற்றுமொரு பொன்னாள்
நீ எனக்கு இல்லாள்
என உறுதி  செய்த
திருநாள் .

HAPPY  BETROTHAL DAY பொண்டாட்டி !!!

Sunday, April 7, 2013

எண்ணச்சிதறல்கள்-4 !!!


மார்கழி குளிரில்
தொடங்கியது
உன் மீதான
என் பார்வை

மாசியின் ஒரு மாலையில்
உன்னை கண்டதும்
மலர்ந்தது
உன் மீதான
என் காதல்

வைகாசி வெயிலில்
சில்லென வந்தது
என் மீதான
உன் சம்மதம்

ஆணியில் அழகாய்
நிச்சயமாய் பூத்தது
நம் மீதான
நம் நம்பிக்கை

ஆவணியில் அனைவரும்
வாழ்த்த நிறைவாய்
அரங்கேறியது நமக்கான
நம் திருமணம் எனும்
அன்பு பந்தம்

மாதங்கள் பல
வந்தாலும்
வருடங்கள் பல
கடந்தாலும்
வாழ்வில் ஒன்றாய்
ஓருயிராய் இருப்போம்

வற்றாத நதியாய்
என்றென்றும் எங்கெங்கும்
ஓடி திரிவோம்
காற்றாய் காதலாய்
எங்கும் கலந்திருப்போம் !!!
  
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ 

Tuesday, June 12, 2012

எண்ணச்சிதறல்கள்-3 !!!


தென்றலிலே மிதந்து வரும் தேவதை
எனக்கூற கேட்டிருக்கிறேன்
ஆனால் இங்கே...
தேவதையே தென்றலாக வருகிறது
என் முன்னே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

கண்மூடி எனை நினைத்து
உறங்கடி தோழி
கனவில் என்னை காண.....
நானும் கண்மூடி
எனை மட்டும் நினைத்து
உறங்குகிறேன் கனவில்
உன்னை மட்டும் காண !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

நான் வார்த்தை வர
திண்டாட்டத்தில் இருந்தால்
எனக்கான வார்த்தைகள் கூறி
நீ முடிப்பாய்,
அது பிடித்து இருக்கு !!!

இம் என்ற ஒற்றைச்சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்களை
புரியவைக்கிறாய்,
அது பிடித்து இருக்கு !!!

தொடரும் நமது உறவு
பந்தத்தில் எனக்கான
உரிமைகள் நீ தருவது
பிடித்து இருக்கு !!!

காதல் பேசுகையில்
தொடர்ந்து நீ பேசும்
அர்த்தங்கள் புரியாமல் விழிக்க
"ஐ லவ் யு" என்பதை
வேறுவிதமாக சொன்னேன் என
நீ சொல்வது பிடித்து இருக்கு !!!

உனக்கான மாலை
சூடும் வேலையில் எனக்கான
வெட்கத்தையும் சேர்த்து
நீயே எடுத்து கொள்கிறாய்
அதுவும் பிடித்து இருக்கு !!!

என் காதல் உன் காதல்
என பிரித்து சொல்லாது
நம் காதல் என நீ சொல்வது
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.

Sunday, June 3, 2012

எண்ணச்சிதறல்கள்-2 !!!

விடிகின்ற பொழுது உன்னோடு
விடிய வேண்டும்...
நினைக்கின்ற பொழுது
நீ என்னுடன் வேண்டும்...

நாளை நடப்பவை
நமக்கே ஆனாலும்
நிந்தன் அருகாமை
இல்லாத பொழுதுகள்
என்னுடன் இருந்தால் என்ன?
இல்லாமல் என் இளமைதான்
சுட்டால் என்ன?

நீ பார்த்த பார்வைகளும்
உன் கண்கள் பேசிய
மொழிகளும் சிறிது
நேரம்தான் என்றாலும்
உந்தன் காதல்
பூத்த கணம்
என்னுள்ளே இன்றும்
இன்னும் இனிக்குதடி

இரு தோளிலும்
பூமாலைகள் சேரும்
காலம் வரும் வரை
உனக்கான என் காத்திருப்பும்
எனக்கான உன் காத்திருப்பும்
சிறிதே கசந்தாலும்
இனிக்கவே செய்கிறதடி
நான் உன்னை அடையும்
அந்நாளை எண்ணி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

தென்றல் வீசினாலே
தாங்காத என் மனசு
தமிழே தென்றலாய்
வீசினால் என் செய்வேன்???

அழகிய வண்ணம் கண்டாலே
சொக்கும் மனதை
வானவில் வண்ணமாய் நீ
வந்தால் என் செய்வேன்???

நல்லிசை கேட்டாலே
மயங்கும் மனதை
உன் குரல் ஒலிக்கும் நேரம்
மட்டும் எவ்வாறு
கட்டுக்குள் வைப்பேன்???

நீ பார்த்த பார்வைகள்
நீ பேசிய பொழுதுகள்
நீ கூறிய வார்த்தைகள்
எங்கும் நீயாய் இருக்கையில்
என்னுள் மட்டும் நீ அல்லாது
வேறொருவர் இருக்க
வாய்ப்புகளும் உளவோ?

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

.

Friday, May 25, 2012

எண்ணச்சிதறல்கள்-1 !!!


தமிழே இனி நீ
என் வாழ்வானால்
நானும் சிறப்பேன்
தமிழும் சிறக்கும்...

உனைக்கண்ட அந்நாள்
முதல் இந்நாள் வரை
என்னுள் இருக்கும் நான்
நானாக மட்டும் இல்லை...
நீயுமாகத்தான் நான்....

உலகம் மிக எளிமையாக
சொல்லி விட முடியும்
இது பைத்தியமென்று...
எனக்கு மட்டும் தானே தெரியும்
இது காதல் பைத்தியம்
மட்டும் அல்ல....

அதற்கும் மேலே
உன் மூளைக்குள்
நானும் ஓர் மூலை
என்றாலும்
நீயே நானே
நானே நீயே என !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

அன்று என்னுள் பூத்தது
நீ மட்டும் அல்ல...
உனக்கானா நானும்
எனக்கான நீயும்தான் !!!!

உன் புன்சிரிப்பில்
மலர்ந்தது நான் மட்டும் அல்ல....
உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும் தான் !!!

உனக்கான என் காத்திருத்தல்
ஓரிரு மாதங்கள் எனினும்
உனை மட்டும் பார்த்திருந்தேன்
உன் கண் அசைவிற்காக மட்டும்
காத்திருந்தேன்.....

ஓரிரு மாதங்கள் மட்டும் அல்ல...
நீதான் என் வாழ்வென்றால்
வாழ்நாள் வரை உனக்காக
காத்திருக்க நான்
என்றுமே தயார் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

ஒவ்வொரு முறையும்
நீ சொன்னது தான்
எனைச்சுற்றி ஒலிக்கின்றதடி !!!

என் வாழ்வில்
சோகம் மீட்டிய
சுகம் நீயடி !!!

வறண்டிருந்த என்
நெஞ்சினில் வைகையாய்
நீ நுழைந்தாயடி !!!

சுற்றம் எனும் மாயை
சூழ் உலகில்
நீயே என் சுடர் விளக்கடி !!!

இத்துணை நாளாய்
பிற உலகு சூழ் நான்
இன்று முதல்
உன் மற்றும் என்
எண்ணச்சுயற்சியில்
நீயும் நானும்
மற்றும்
நம் எண்ணங்களும் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

.

Friday, April 20, 2012

எண்ணச்சிதறல்கள் !!!

 

உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும்
இரயில் தண்டவாளம் போல்
சேர்ந்தே பயணிக்கிறது...
கடைசிவரை
ஒன்றை ஒன்று
தொடாமலே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 
போ போ என்கிற
உன் உதட்டின்
வார்த்தைக்கும்
வா வா என்கிற
உன் கண்ணின்
மொழிக்கும்
வித்தியாச அர்த்தங்கள்
தேடியே என் நாட்கள்  
நீளுதடி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உலகில் மொழிகள் பல...
முயற்சிகள் செய்து அதில்
நான் கற்றது சில...
எல்லாவித முயற்சிகள்
செய்தும் ஒன்றில் மட்டும்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அது உன் கண்கள் 
பேசும் மொழியன்றி 
வேறென்ன தோழியே ??? 

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கான ஒவ்வொரு
காத்திருத்தல் முடிவிலும்
நீ என்னிடம்
மன்னிப்பு கேட்கும் முன்
நான் உன்னிடம்
நன்றி சொல்லுவேன்.....
ஏனெனில் உனக்கான
என் காத்திருத்தல்
முழுதும் உன் எண்ணங்களே
நிறைந்திருப்பதால் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
டிஸ்கி : கவிதை எழுதணும்னா, காதலிச்சாதான் முடியும்னா  அப்ப சரித்திரம், த்ரில்லர், க்ரைம் எழுதுறவங்க எல்லாம் அதெல்லாம் செஞ்சிப்பார்த்தா எழுதுறாங்க ??
சும்மா தகவலுக்கு....!!!
.