Tuesday, June 12, 2012

எண்ணச்சிதறல்கள்-3 !!!


தென்றலிலே மிதந்து வரும் தேவதை
எனக்கூற கேட்டிருக்கிறேன்
ஆனால் இங்கே...
தேவதையே தென்றலாக வருகிறது
என் முன்னே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

கண்மூடி எனை நினைத்து
உறங்கடி தோழி
கனவில் என்னை காண.....
நானும் கண்மூடி
எனை மட்டும் நினைத்து
உறங்குகிறேன் கனவில்
உன்னை மட்டும் காண !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

நான் வார்த்தை வர
திண்டாட்டத்தில் இருந்தால்
எனக்கான வார்த்தைகள் கூறி
நீ முடிப்பாய்,
அது பிடித்து இருக்கு !!!

இம் என்ற ஒற்றைச்சொல்லில்
ஓராயிரம் அர்த்தங்களை
புரியவைக்கிறாய்,
அது பிடித்து இருக்கு !!!

தொடரும் நமது உறவு
பந்தத்தில் எனக்கான
உரிமைகள் நீ தருவது
பிடித்து இருக்கு !!!

காதல் பேசுகையில்
தொடர்ந்து நீ பேசும்
அர்த்தங்கள் புரியாமல் விழிக்க
"ஐ லவ் யு" என்பதை
வேறுவிதமாக சொன்னேன் என
நீ சொல்வது பிடித்து இருக்கு !!!

உனக்கான மாலை
சூடும் வேலையில் எனக்கான
வெட்கத்தையும் சேர்த்து
நீயே எடுத்து கொள்கிறாய்
அதுவும் பிடித்து இருக்கு !!!

என் காதல் உன் காதல்
என பிரித்து சொல்லாது
நம் காதல் என நீ சொல்வது
ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.

7 comments:

சசிகலா said...

தென்றல் என்று பார்த்ததும் உள்ளே நுழைந்து விட்டேன் சுகமாய் இருந்தது தென்றல் .

கத்தார் சீனு said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சசிகலா அவர்களே......

கும்மாச்சி said...

சீனு கவிதையிலும் கலக்குறீங்க, வாழ்த்துகள்.

கத்தார் சீனு said...

மிக்க நன்றி கும்மாச்சி சார் !!!
உங்கள் வருகை எனக்கு டானிக் சார் !!!

Unknown said...

ஏற்கனவே நீங்க திறமை மிக்கவர்... இப்போ தமிழ் ஆர்வம் இன்னும் மெருகு எத்திடிச்சு..

வாழ்க தமிழ் வளர்க என் அண்ணா ;)



--பாசமலர்..

கத்தார் சீனு said...

மிக்க நன்றி சகோதரி !!!

Boss said...

Amaidhiyai urangugiradhu
indha valai...
varthaigal marandhu ponadha
illai
maraindhu ponadha?...
eluthugal thodukkum
indha pookaranukku
mana maatramo
illai
(thiru)mana maatramo???!!!!....