தேவதைகள் வெண்ணிற
உடைகள் மட்டுந்தான்
உடுத்தும் என்று
நினைத்திருந்தேன்
அந்நாளில் உன்னைக்கண்ட
பின்தான் தேவதைகள்
பிங்க்நிறத்தில் கூட
உலவும் என
உணர்ந்தேன்
நான் உனக்கும்
நீ எனக்கும்
உறுதியான நாள்
இரு உள்ளங்கள்
இணைந்த நாள்
உன்னை மிக அருகில்
ரசித்த(தரிசித்த) நாள்
பின்னாளில் நிறைய
கைக்கோர்த்து திரிந்தோம்
ஆனாலும் அந்நாளை
நினைக்கையில் - இப்பவும்
ஏதோ ஓர் சுகமான
உணர்வலை உடல்
முழுக்க சூடாய்
பரவுதடி
ஓராண்டு ஓடிவிட்டதடி
பெண்ணே - இந்நாள்
நம் வாழ்வின்
மற்றுமொரு பொன்னாள்
நீ எனக்கு இல்லாள்
என உறுதி செய்த
திருநாள் .
HAPPY BETROTHAL DAY பொண்டாட்டி !!!
4 comments:
இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரரே .
@அம்பாள் அடியாள்
மிக்க நன்றி சகோதரி.
உங்கள் வரவு எனக்கு ஊக்கம்.
Vazthukkal Srini..
Nice.....
Post a Comment