Monday, July 25, 2011

வாழ்க்கை இன்னொரு முறை கிடைப்பதில்லை !!! (Zindagi Na Milegi Dobara)

உங்க வாழ்க்கைல நண்பர்களை ரொம்ப மிஸ் பண்றீங்களா? வெளியூர் சுற்றுலா பயணம் நண்பர்களோடு போய் ரொம்ப நாள் ஆச்சா? வாழ்கையின் அர்த்தங்கள் சரியாக பிடிபடுவதில்லையா? உங்களுக்கு அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்ல விருப்பம் அதிகமா? அப்ப நீங்க செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்...ஜிந்தகி நா மிலேகி தோபாரா படத்தை பக்கத்தில் ஓடுற திரை அரங்கில் போய் பார்த்துடுங்க. 
 படத்தின் துவக்கத்தில், கபீர்(அபய் தியோல்) தன் காதலை சொல்லி, கல்யாணம் செய்து கொள்ள நடஷாவிடம்(கல்கி) ப்ரபோஸ் செய்கிறார். பிறகு நடக்கும் அவர்களின் நிச்சயத்தில், தன் இரு நண்பர்களோடு 
ஸ்பெயின்  நாட்டுக்கு சென்று மூன்று வாரம் பேச்சிலர் பார்ட்டிதனை
வித்தியாசமாக ரோடு ட்ரிப்பில் செலவிட செல்வதாக சொல்கிறார். 
ஸ்பெயினில் கபீருடன் மற்ற இரு நண்பர்களான இம்ரான்(பர்ஹான் அக்தர்) 
மற்றும் அர்ஜுனும் (ஹ்ரித்திக் ரோஷன்) சேர்ந்து கொள்கின்றனர். 
ஸ்பெயினில் மூன்று நண்பர்களும் அவரவர் விருப்பத்திற்க்கேற்ப 
ஆளுக்கு ஒரு விளையாட்டை, வெவ்வேறு   இடங்களில் தேர்வு  செய்கின்றனர். ஒவ்வொரு இடமாக  நெடுஞ்சாலை வழியாக
செல்கின்றனர்.  எவ்வாறு அவர்களின் ஸ்பெயின் ட்ரிப் செல்கிறது, 
அந்த சுற்றுலாவின் ஊடே நடக்கும்  நிகழ்வுகள், சந்திக்கும்
மனிதர்கள், பின் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு திசை மாறுகிறது என்பதுதான் கதை.     
 ஹ்ரித்திக் ரொம்ப அழகாய் அடக்கி வாசித்து நடித்திருக்கிறார்.
இது மாதிரி மூன்று பேர் உள்ள கதையை தேர்வு செய்து 
நடித்ததற்க்கே ஒரு ஸ்பெஷல் சபாஷ். லைலாவாக வரும் 
காத்ரினாவிடம் காதலில் விழும் இடங்களும், தன் தொழிலா, காதலா, வாழ்க்கையா என குழம்பும்  இடங்களிலும் நல்லா நடித்திருக்கிறார்.
பர்ஹான் படம் முழுக்க நகைச்சுவை செய்கின்றார்...மனதில், தன் உண்மையான தந்தையை தேடும் சோகத்தை வைத்துக்கொண்டு அழகாய் நடித்து இருக்கிறார்...முக்கியமாய் தன் தந்தையை சந்திக்கும் நேரத்திலும், காத்ரினாவிடம் ஜொள்ளு விடும் போதும். படத்தில் உள்ள முக்கியமான ஒன் லைனர்ஸ் மற்றும் ஜாவேத் அக்தரின் கவிதைகள் 
எல்லாம் அற்புதமாய் பர்ஹானுக்கு படத்தில் அமைந்துள்ளது. அபய் தியோலும் எப்பவும் போல அளவா சிம்பிளா  நடித்திருக்கிறார். 
காத்ரினா செம அழகா இருக்கார்..கொஞ்சம் போல நல்லாவும் நடிச்சிருக்காங்க. கல்கி கொச்செளின், நஸ்ருதீன்ஷா எல்லாம் வந்து போறாங்க.   
 வெகு சில இடங்களில் தில் சாஹ்தா ஹய் படத்தின் தாக்கம் இருந்தாலும், படம் டெக்னிக்கலா மிரட்டி இருக்காங்க. முக்கியமா அந்த ஸ்கை டைவிங் 
காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பிரமிக்க வைக்கிறது. பாக்கிற நாமளும் 
பறக்கிற மாதிரி ஒரு உணர்வு. பின்னணி இசை உறுத்தாமல் படத்தோடு 
ஒன்றி வருகிறது. யாரோ வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் கார்லோஸ் 
கட்டாலனாம், ரொம்ப இயற்கையா எடுத்து இருக்கார். ஜோயா அக்தர் அற்புதமா எழுதி இயக்கி இருக்காங்க. முக்கியமாய் வசனங்கள் அற்புதம். இன்னும் படத்தில் சிலாகித்து சொல்ல நிறைய விஷயம் உள்ளது.... சொல்லி கேட்பதை விட பார்த்து அனுபவித்தல் நன்றாக இருக்கும். ஆங்கிலத்தில் N O S T A L G I C  என்ற வார்த்தை சொல்வார்கள் 
இல்லையா, இந்தப்படம் முடிகையில்  கண்டிப்பாய் அதை உணர முடியும்.
 மத்தபடி படம் கொஞ்சம் பொறுமையா போகும், உங்களுக்கு டபாங்,
ஓம் சாந்தி ஓம், சிங் இஸ் கிங்  மாதிரி படங்கள்தான் எப்பவும் பிடிக்கும் என்றால்,  இது கண்டிப்பாய் உங்களுக்கான படம் அல்ல. 
.

3 comments:

Anonymous said...

I too have seen this movie. its Damn good. have you watched this one. "chillar party". thats worth a watch.

Saran(ya)

Anonymous said...

மறந்துட்டேன் சாரி.. விமர்சனம் அருமை..
Zinda'gi na milegi D'obara.

சரண்{(யா)ர்}

கத்தார் சீனு said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சரண்{(யா)ர்} !!!
chillar party இங்க ரிலீஸ் ஆகல....ஆனாலும் நான் பாக்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல இருக்கு....நன்றி !!!!