Tuesday, July 19, 2011

கால் சென்டரில் ஓர் இரவு (One Night @ the Call Center) !!!

சேத்தன் பகத் எழுதிய இரண்டாவது புத்தகம்தான் "One night @ the call center". சமீபத்தில, ஒரு நாலு நாள் விடுமுறைக்கு இந்தியா செல்கையில், தோகாவில் விமானம் ஏறிய உடன் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். விமானம் மஸ்கட் சென்று, வேறு விமானம் மாறி சென்னை தொடும் நேரத்தில் புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். ஒரு இரவில் நடக்கும் கதைதனை நானும் ஒரே இரவில் படித்து முடித்தேன் (நாங்களும் ஒரே நைட்ல எதாவது செய்வோம் இல்ல !!!)
சேத்தன் ஒரு இரவில் ரயில் பயணம் செல்கையில், கூட பயணிக்கும் ஒரு சக பெண் பிரயாணி சொல்லும் கதைதனை, இந்த புத்தகமாக எழுதி இருக்கார் என்பதில் இருந்து கதை தொடங்குகிறது. எப்பொழுதும் போல கதை சொல்லும் பாணி, கதையின் அகத்தே உள்ள ஒரு பாத்திரத்தை வைத்து அந்த பாத்திரத்தின் நோக்கில் கதை சொல்லப்பட்டுள்ளது. ஒரு இரவில், ஒரு கால் சென்டரில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. அதாவது ஒரு 12 மணி நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை கோர்த்து எழுதப்பட்டவைதான் இந்த புத்தகம். ஒரு இரவின் நிகழ்வுகளை 250 பக்கம் கொண்ட கதையாக எழுத முடியுமா என யோசிப்பவர்கள்......இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஷ்யாம், வ்ரூம், இஷா, பிரியங்கா, ராதிகா மற்றும் மிலிட்டரி மனிதர் ஆகிய ஆறு பேரும் ஒரு கால் சென்டரில் ஒரு டீமாக வேலை
செய்பவர்கள். ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சினை, விரக்தி, ஏமாற்றங்கள் என இருக்க, ஒரு இரவில் இதை அத்தனையும் சொல்லி, கடைசியில் ஏக போக த்ரில்லோடு கதை முடிகிறது. கதை முழுக்க முழுக்க இரவு ஷிப்டில் கால் சென்டரில் நடப்பவைதான். கதையின் இறுதியில் கடவுள் போன் செய்வது போல் ஒரு நிகழ்வு வருகிறது...இதையும் சேத்தன் இறுதியில் நியாயப்படுத்தியுள்ளார்.  கதையின் இறுதி அப்படியே  ஒரு ஹிந்தி படம்  பாக்கிற மாதிரி ஒரு
உணர்வு. சேத்தன் பெண்களை பற்றி  எழுதுவது மிகவும் ரசிக்கும்படி
உள்ளது. அவரின் மற்ற கதைகளில் எல்லாம்   ஒரு பெண்தான் பிரதானமாக  இருப்பார். இந்த கதையில் மூணு பெண்கள், ஆகையால் கொஞ்சம் கூடுதலா கவனம் செலுத்தி எழுதி இருப்பார் போல.. கால் சென்டர் பற்றி நிறைய விஷயங்கள் கேட்டு, படித்து, பார்த்து எழுதி இருக்கார்....கிடைக்கிற கேப்ல எல்லாம் கால் சென்டருக்கு போன் செய்யும் அமெரிக்காகாரங்களை கிண்டல் அடிச்சி இருக்கார். கால் சென்டரில் நடக்கும் அரசியல், காதல், குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகள் என கலந்து கட்டி சொல்லி, இறுதியில் ஒரு அழுத்தமான செய்தியோடு முடிகிறது கதை.
Title: One night @ the call center
Author: Chetan Bhagat
Publisher: Rupa and Co., New Delhi
Language: English
Release Date: October 2005
Pages: 257
Price: Rs .95

ஒரு சில சொற்ப இடங்களில் கதை கொஞ்சம் மெல்ல நகர்கின்றது, மற்றபடி கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் தான். ஒரு வழியாக சேத்தன் எழுதிய நான்கு புத்தகமும் படித்து விட்டேன். அடுத்த வெளியீடு தீபாவளிக்கு.....காத்திருக்கிறேன். எனக்கு பிடித்த வரிசையில் சேத்தனின் புத்தகங்களை கீழே வரிசைபடுத்தி உள்ளேன். (எல்லா புத்தக தலைப்பிலும் ஒரு எண் இருக்கிறது)
  • 2 States - The Story of My Marriage
  • Five Point Someone
  • One night @ the call center
  • The 3 Mistakes of my Life
.

5 comments:

சாந்தி மாரியப்பன் said...

ரொம்பவே சுவாரஸ்யமான புத்தகம்தான். அதிலும் கடைசியில் அவர்கள் காரில் மாட்டிக்கொண்டு தவிக்கும்போது, சேத்தனின் எழுத்துநடை நம்மை அப்படியே உள்வாங்கிக்கொள்கிற வகையில் இருக்கும்..

கத்தார் சீனு said...

நன்றி அமைதிச்சாரல் !!!

Anonymous said...

have you read this one. the palace of illusions. i suggest this one to you. ITs a beautiful book, and this is about mahaabharata and from the perception of Draupathi.. Good One.

Saran'ya

Anonymous said...

even this one is good. if u r a frequ'nt reader. I presc' one more for u. will take some time to spaer. But a nice one. Go for Whatz Happening to my Body'.

Saran'Ya

கத்தார் சீனு said...

thanks for your comments Saran'ya
noted your books suggestions,,,will read it sometime in the future.....