தமிழே இனி நீ
என் வாழ்வானால்
நானும் சிறப்பேன்
தமிழும் சிறக்கும்...
உனைக்கண்ட அந்நாள்
முதல் இந்நாள் வரை
என்னுள் இருக்கும் நான்
நானாக மட்டும் இல்லை...
நீயுமாகத்தான் நான்....
உலகம் மிக எளிமையாக
சொல்லி விட முடியும்
இது பைத்தியமென்று...
எனக்கு மட்டும் தானே தெரியும்
இது காதல் பைத்தியம்
மட்டும் அல்ல....
அதற்கும் மேலே
உன் மூளைக்குள்
நானும் ஓர் மூலை
என்றாலும்
நீயே நானே
நானே நீயே என !!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அன்று என்னுள் பூத்தது
நீ மட்டும் அல்ல...
உனக்கானா நானும்
எனக்கான நீயும்தான் !!!!
உன் புன்சிரிப்பில்
மலர்ந்தது நான் மட்டும் அல்ல....
உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும் தான் !!!
உனக்கான என் காத்திருத்தல்
ஓரிரு மாதங்கள் எனினும்
உனை மட்டும் பார்த்திருந்தேன்
உன் கண் அசைவிற்காக மட்டும்
காத்திருந்தேன்.....
ஓரிரு மாதங்கள் மட்டும் அல்ல...
நீதான் என் வாழ்வென்றால்
வாழ்நாள் வரை உனக்காக
காத்திருக்க நான்
என்றுமே தயார் !!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
ஒவ்வொரு முறையும்
நீ சொன்னது தான்
எனைச்சுற்றி ஒலிக்கின்றதடி !!!
என் வாழ்வில்
சோகம் மீட்டிய
சுகம் நீயடி !!!
வறண்டிருந்த என்
நெஞ்சினில் வைகையாய்
நீ நுழைந்தாயடி !!!
சுற்றம் எனும் மாயை
சூழ் உலகில்
நீயே என் சுடர் விளக்கடி !!!
இத்துணை நாளாய்
பிற உலகு சூழ் நான்
இன்று முதல்
உன் மற்றும் என்
எண்ணச்சுயற்சியில்
நீயும் நானும்
மற்றும்
நம் எண்ணங்களும் !!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.
5 comments:
So cute,
Lines are Very very nice...... no words to explain about love………… You did………..
Very nice kavingare......
@ Anonymous
Thanks a lot. your words of encouragement mean a lot.
@ Karups
Thanks da...
Kavingar laam illa machi...
yedho thonuvadhai ezudharen !!!
ennasetharalgal super.....
Ethanai murai yosithalum
thirumbavum ninaika sollum manathai
enavendur samathanam seya
neyae solividu
/எத்தனை முறை யோசித்தாலும்
திரும்பவும் நினைக்கச்சொல்லும் மனதை
என்னவென்று சமாதானம் செய்ய
நீயே சொல்லிவிடு !!!/
மிக அழகா சொல்லி இருக்கீங்க அனானி அவர்களே !!!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
Post a Comment