Friday, April 20, 2012

எண்ணச்சிதறல்கள் !!!

 

உனக்கான என் காதலும்
எனக்கான உன் காதலும்
இரயில் தண்டவாளம் போல்
சேர்ந்தே பயணிக்கிறது...
கடைசிவரை
ஒன்றை ஒன்று
தொடாமலே !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
 
போ போ என்கிற
உன் உதட்டின்
வார்த்தைக்கும்
வா வா என்கிற
உன் கண்ணின்
மொழிக்கும்
வித்தியாச அர்த்தங்கள்
தேடியே என் நாட்கள்  
நீளுதடி !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உலகில் மொழிகள் பல...
முயற்சிகள் செய்து அதில்
நான் கற்றது சில...
எல்லாவித முயற்சிகள்
செய்தும் ஒன்றில் மட்டும்
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்
அது உன் கண்கள் 
பேசும் மொழியன்றி 
வேறென்ன தோழியே ??? 

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கான ஒவ்வொரு
காத்திருத்தல் முடிவிலும்
நீ என்னிடம்
மன்னிப்பு கேட்கும் முன்
நான் உன்னிடம்
நன்றி சொல்லுவேன்.....
ஏனெனில் உனக்கான
என் காத்திருத்தல்
முழுதும் உன் எண்ணங்களே
நிறைந்திருப்பதால் !!!

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
டிஸ்கி : கவிதை எழுதணும்னா, காதலிச்சாதான் முடியும்னா  அப்ப சரித்திரம், த்ரில்லர், க்ரைம் எழுதுறவங்க எல்லாம் அதெல்லாம் செஞ்சிப்பார்த்தா எழுதுறாங்க ??
சும்மா தகவலுக்கு....!!!
.

9 comments:

...αηαη∂.... said...

// கவிதை எழுதணும்னா, காதலிச்சாதான் முடியும்னா அப்ப சரித்திரம், த்ரில்லர், க்ரைம் எழுதுறவங்க எல்லாம் அதெல்லாம் செஞ்சிப்பார்த்தா எழுதுறாங்க ??
சும்மா தகவலுக்கு....!!!//

அதான..,
கவிதை நல்லா இருக்கு சார்...

சசிகலா said...

காத்திருப்பின் அவஸ்தையை கவித்துவமாய் விளக்கிய விதம் அருமை .

அருணா செல்வம் said...

அப்போ .. காதலிக்காமலேயே கவிதை வரும் என்கிறீர்கள்... சூப்பர்.

எனக்கு காதல் மட்டும் தான் வருகிறது. கவிதையே வர மாட்டுதே! என்ன செய்யலாங்க...?

Anonymous said...

very nice.......
especially your notes

கத்தார் சீனு said...

@ ஆனந்த்
நன்றி...உங்கள் கிறுக்கல்கள் அருமை...இனி தொடர்கிறேன்...

@ சசிகலா
நன்றி...உங்கள் தென்றல் அருமை...இனி தொடர்கிறேன்...

@ ArounA Selvame
நன்றி...உங்கள் தளம் அருமை...இனி தொடர்கிறேன்...
ஏன் எல்லாம் பிரெஞ்சாக உள்ளது??

@ Anonymous
நன்றி....

ரிஷ்வன் said...

காதல் உணர்வு இருந்தால் கவிதை வரும் என்பது உண்மை தான்..... அருமை.... ரிஷ்வன்...

கத்தார் சீனு said...

கருத்துக்கும் வரவுக்கும் நன்றி ரிஷ்வன்.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் காதல் உணர்வு இருந்தால் கவிதை வரலாம்.
ஆனால் காதல் உணர்வு இருந்தால் மட்டும் தான் கவிதை வரும் என்பது இல்லை....

Boss said...

Than Payanam
mudiyum varai
thodamale thodarum
thandavalam
nagarigamana uravin
uchakattam!!!

oru velai Pathai mari
payanika vendiyirupin
izhapin valiyum
kutra unarvin
kodumayum
thavirkapadalam...

edhuvaginum,
thandavala payanathin
mudivil
oru parandhu virindha
ellai oru arambam...

endha thandavalathil
vandhu serndhalum
ethanai pathaigal marinalum
irungagayil
kai korthu iranguvom
ena nambuvom!!

illayenil
athanai dhoora payanamum
verum ninaivugalai
udhiradha sarugugalai
Kalam tholaikum kanavugalai
kagidha pookalin
vasanaiyai mattume
enrenrum poothirukum!!!!

கத்தார் சீனு said...

super da boss...
miga arumai unadhu edhir kavidhai !!!!