Thursday, July 22, 2010

சீனு டைம்ஸ்....

நேத்து, எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை எல்லாருக்கும் அனுப்பி வச்சேன். அதோடு தலைப்பு, "வாழுகிறேன் கணிப்பொறியோடு". கொஞ்ச நேரத்தில ரெண்டு நண்பர்கள்ட்ட இருந்து தொலைபேசி அழைப்பு.... இருவரும் கேட்ட கேள்வி ஒன்னுதான். "யாருடா அது கனிமொழி", அவ கூட எப்பத்திலிருந்து வாழுற??. ங்கொய்யால, ஒழுங்கா படிங்கடா, அது கணிப்பொறி. என்ன பார்த்தா மட்டும் தான் இப்படியா, இல்ல..., என்ன கொடுமை சீனு இது???

*****************************************************************************************

Knight and Day படம் ஒரு மூணு வாரம் முன்னாடி, இங்க ரிலீஸ் ஆனப்ப போய்ப்பார்த்தேன். JAMES BOND படங்களின் சாயல் இருந்தது....Tom Cruise பறந்துகிட்டே இருக்கார்.....எல்லாரயும் பொளந்துகிட்டே இருக்கார் படம் முழுக்க...இந்த மாதிரி ஹாலிவுட் ஆக்க்ஷன் படங்கள்லாம் (Transporter, Terminator, MI Series..etc) நம்ம கைதட்டி பாக்கிறோம்...ஆஹா..ஓஹோனு பாராட்டி தள்ளுவோம், லாஜிக்லாம் பார்க்கவே மாட்டோம். ஆனா இதையே, இளையதளபதி டாக்டர் விஜய்யோ, தல அஜித்தோ பண்ணும் போது மட்டும், உலக கேள்விகள் கேப்போம், பதிவெழுதி கிழி கிழின்னு கிழிப்போம். என்னங்க நியாயம் இது??? TOM CRUISE கார்ல பறந்து பறந்து ஓட்டினா OK, ஆனா இளையதளபதி டாக்டர் விஜய் மட்டும் accelerator வயர வாய்லயே இழுத்துகிட்டு கார் ஓட்டினா, நம்ம எல்லாம் சேர்ந்து அவர ஓட்றது... என்னங்க நியாயம் இது??? எல்லாரயும் சமமா பாருங்க.....(இது சத்தியமா பகடி இல்ல, உயர்வு நவிற்சி இல்ல, வஞ்ச புகழ்ச்சியும் இல்லீங்கோ...)
*****************************************************************************************
சில படங்கள் பார்ர்கும்போது, ஒரு சிலர் கேக்கிற கேள்விக்கு விடைகளே தெரிவதில்லை.... நீங்களாவது முயற்சி பண்ணுங்களேன்.

1. உன்னை போல் ஒருவன் - ராணிபேட்டை ராஜேஸ்வரி தியேட்டர்ல, படம் இடைவேளைல ஒருத்தர் என் பின்னாடி இருந்து இப்படி வருத்தப்பட்டார், "அதுக்குள்ள இடைவேளையா, என்னாங்கடா, ஒரு டூயட் கூட போடல??" (மோகன்லால் - லக்ஷ்மி, கமல்-அனுஜா, பரத் ரெட்டி- பூனம்...யாருக்குடா இந்த கதையில டூயட் வைக்கறது... ...முடியல..)

2. Delhi-6 -"கடைசி வரைக்கும், அந்த குரங்கை காட்டவே இல்லையேப்பா"?

3. ஹேராம் படம் முடிச்சிட்டு வெளில வரும்போது, ஆற்காடு ஜோதி தியேட்டர் வாசல்ல ஒருத்தன் கேட்டான், "ஏன் படத்துல, காந்தி ரெண்டு முறை செத்து போறாரு ??"
*****************************************************************************************

என் கிளைகளை
நறுக்கும் தோட்டக்காரனே!
வேலிக்கு அடியில் நழுவும் என்
வேர்களை என்ன செய்வாய்?”

இதை யார் எழுதியது என்று தெரியவில்லை....
எனக்கு படிச்சவுடனே பிடிச்சது !!....
***************************************************************************************** நேத்து, எனக்கு பிடிச்ச ரெண்டு ஹிந்தி படம் UTV சேனல்ல தொடர்ந்து போட்டாங்க. Delhi-6 & Dil Chahtha Hai. Delhi-6 படத்தில, "தில் மேரா" னு ஒரு பாட்டு ரொம்ப அழகா எடுத்திருப்பாங்க. அந்த பாட்டு எடுத்த விதம், வாத்தியார் சுஜாதா கதை எழுதும் நடை மாதிரியே இருந்தது. Nostalgic Memories of the great Sujatha...சுஜாதா இன்னும் கொஞ்ச நாள் (atleast ஒரு இருபது வருஷம்) இருந்து இருக்கலாம். We miss you, வாத்தியாரே.
*****************************************************************************************

3 comments:

Mohamed Faaique said...

நம்ப முடியாத காட்சிகளை நம்பும் படி எடுப்பது HOLYWOOD , நம்பக்கூடிய கட்சியையும் நம்ப முடியாமல் எடுப்பது நம்ம STYLE

கத்தார் சீனு said...

@ Najeeb

நன்றி !!!

Thani said...

ennada..i didn't received the mail.. :)

started reading ur bolg, continue without stopping..

Thanks for friendship day wishes