Thursday, April 12, 2012

நீ...நான் !!!


தேவதையாய் யாராவது  
பார்த்ததுண்டோ?
தினமும் நான்
உன்னுருவில் பார்க்கின்றேன்....

மின்னலை யாராவது
அருகில் கண்டதுண்டோ?
தினமும் நான்
உன் கண்களில் காண்கின்றேன்...

முழுமதியோடு யாராவது
பேசியதுண்டோ?
தினமும் நான்
உன்னுடன் பேசுகின்றேன்....

மலர்கள்  சிரிப்பதை யாராவது
கண்டதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு சிரித்து மலர்கின்றேன்...

தென்றல் காற்றோடு யாராவது
வாழ்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு வாழ்ந்து மகிழ்கின்றேன்...

ஓவியங்கள் என்றாவது
காதல் செய்வதுண்டோ?
தினமும் நான்
உன்னோடு காதலில் திளைக்கின்றேன்...

ஆம்..நீ எனக்கு

தேவதை
மின்னல்
முழுமதி
மலர்கள்
தென்றல்
ஓவியம்
இன்னும் பல...

நான் மட்டும்
உனக்கு என்றுமே
நான்தான்.....உன்னனைத்துமே
நான் மட்டும்தான் !!!
.

4 comments:

கும்மாச்சி said...

நல்ல கவிதை, வாழ்த்துகள்.

கத்தார் சீனு said...

நன்றி கும்மாச்சி சார் ....

Anonymous said...

nalla karpanai valthukal melum elutha

கத்தார் சீனு said...

@ Anonymous

Mikka nandri...