விடிகின்ற பொழுது உன்னோடு
விடிய வேண்டும்...
நினைக்கின்ற பொழுது
நீ என்னுடன் வேண்டும்...நாளை நடப்பவை
நமக்கே ஆனாலும்
நிந்தன் அருகாமை
இல்லாத பொழுதுகள்
என்னுடன் இருந்தால் என்ன?
இல்லாமல் என் இளமைதான்
சுட்டால் என்ன?
நீ பார்த்த பார்வைகளும்
உன் கண்கள் பேசிய
மொழிகளும் சிறிது
நேரம்தான் என்றாலும்
உந்தன் காதல்
பூத்த கணம்
என்னுள்ளே இன்றும்
இன்னும் இனிக்குதடி
இரு தோளிலும்
பூமாலைகள் சேரும்
காலம் வரும் வரை
உனக்கான என் காத்திருப்பும்
எனக்கான உன் காத்திருப்பும்
சிறிதே கசந்தாலும்
இனிக்கவே செய்கிறதடி
நான் உன்னை அடையும்
அந்நாளை எண்ணி !!!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
தென்றல் வீசினாலே
தாங்காத என் மனசு
தமிழே தென்றலாய்
வீசினால் என் செய்வேன்???
அழகிய வண்ணம் கண்டாலே
சொக்கும் மனதை
வானவில் வண்ணமாய் நீ
வந்தால் என் செய்வேன்???
நல்லிசை கேட்டாலே
மயங்கும் மனதை
உன் குரல் ஒலிக்கும் நேரம்
மட்டும் எவ்வாறு
கட்டுக்குள் வைப்பேன்???
நீ பார்த்த பார்வைகள்
நீ பேசிய பொழுதுகள்
நீ கூறிய வார்த்தைகள்
எங்கும் நீயாய் இருக்கையில்
என்னுள் மட்டும் நீ அல்லாது
வேறொருவர் இருக்க
வாய்ப்புகளும் உளவோ?
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
.
5 comments:
ippadhaan unnoda kavidhai varigalin unmayaana artham puriyudhu.
nandri anonymous(Sudhakar)....
hello, antha anonymous naan illa..
Chanceless kalakureenga ponga...
Chanceless kalakureenga ponga.. very nice lines..
Post a Comment